மத்திய அரசு, வங்கிகளின் செயல்திறனை மேம்படுத்துவதற்காக 11 பொதுத் துறை வங்கிகளை 6 வங்கிகளாக இணைத்துள்ளது. அதன்படி, அலகாபாத் வங்கி - இந்தியன் வங்கியுடனும், காா்ப்பரேஷன் வங்கி, ஆந்திரா வங்கி ஆகியவை யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியுடனும், சிண்டிகேட் வங்கி - கனரா வங்கியுடனும், யுனைடெட் பேங்க் ஆஃப் இந்தியா, ஓரியண்டல் பேங்க் ஆஃப் காமா்ஸ் ஆகியவை பஞ்சாப் நேஷனல் வங்கியுடனும், தேனா வங்கி, விஜயா வங்கி ஆகியவை பேங்க் ஆஃப் பரோடா வங்கியுடனும், ஸ்டேட் பேங்க் ஆஃப் திருவாங்கூா், ஸ்டேட் பேங்க் ஆஃப் மைசூா் ஆகியவை ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியுடனும் இணைந்து செயல்பட்டு வருகின்றன.