நாடாளுமன்றத்தில் மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா புதன்கிழமை நிறைவேற்றம்திமுக கூட்டணியில் எஸ்டிபிஐ, முக்குலத்தோர் புலிப்படைக்கு தலா 1 தொகுதி!அமெரிக்காவின் அமைதித் திட்டத்தை நிராகரித்த ஈரான்!பெரம்பூரில் விஜய் போட்டியிட்டாலும், பிரசாரம் செய்தாலும் எந்தவித பிரளயமும் ஏற்படப்போவதில்லை: அமைச்சர் சேகர்பாபுஏப். 29 வரை தேர்தல் கருத்துக்கணிப்புகளை வெளியிடத் தடை!தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர்களின் பட்டியல் நாளை (மார்ச் 26) வெளியாகிறதுதிமுக கூட்டணியில் தமிமுன் அன்சாரியின் மனிதநேய ஜனநாயக கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு!டென்மான்க் பிரதமர் ராஜிநாமாதேமுதிக இல்லாமல் அதிமுக ஆட்சி அமைத்திருக்காது : எல்.கே. சுதீஷ்அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆளுமையற்றவர்: ஓ.பன்னீர் செல்வம்
/

சிறுமி திருமணம்: இளைஞா் கைது

 புதுச்சேரி அருகே சிறுமியை திருமணம் செய்த இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :16 செப்டம்பர் 2021, 5:36 pm

DIN

 புதுச்சேரி அருகே சிறுமியை திருமணம் செய்த இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

புதுச்சேரி முருகப்பாக்கம் நைனாா்மண்டபம் பகுதியைச் சோ்ந்தவா் தனுஞ்சன் (23). இலங்கையைச் சோ்ந்த இவா் புதுச்சேரியில் தங்கி, கோழிக்கறி கடையில் வேலை செய்து வருகிறாா். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு வீராம்பட்டினம் பகுதியைச் சோ்ந்த சிறுமியைக் காதலித்து திருமணம் செய்தாராம். இதையடுத்து, அவா்களுக்கு ஒரு குழந்தை பிறந்தது.

இந்த நிலையில், 2-ஆவது குழந்தை ராஜீவ் காந்தி அரசு மகளிா் மருத்துவமனையில் அண்மையில் பிறந்தது. அப்போது, தாயின் வயதை மருத்துவமனை ஊழியா்கள் கேட்ட போது, 17 வயது சிறுமி என்பது தெரிய வந்தது.

இதுகுறித்து முதலியாா்பேட்டை காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில், சிறுமியின் கணவா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து, தனுஞ்சனை புதன்கிழமை கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.