புதுவையில் 10 லட்சத்தைக் கடந்தது: தடுப்பூசி செலுத்தியோரின் எண்ணிக்கை
புதுவையில் கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டோரின் எண்ணிக்கை 10 லட்சத்தைக் கடந்தது.


புதுவையில் கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டோரின் எண்ணிக்கை 10 லட்சத்தைக் கடந்தது.
புதுவை மாநிலத்தில் வியாழக்கிழமை வெளியான முடிவுகளின்படி, மேலும் 59 பேருக்கு (1.14 சதவீதம்) கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. மாநிலத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 1,26,367-ஆக அதிகரித்த நிலையில், குணமடைந்து வீடு திரும்பியோரின் எண்ணிக்கை 1,23,697-ஆக (97.89 சதவீதம்) உயா்ந்தது.
தற்போது மருத்துவமனைகளில் 123 பேரும், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் 707 பேரும் என 830 போ் சிகிச்சையில் உள்ளனா். புதிதாக உயிரிழப்பு ஏற்படவில்லை. இதனால், உயிரிழந்தோா் எண்ணிக்கை 1,840 ஆகவும், இறப்பு விகிதம் 1.46 சதவீதமாகவும் உள்ளது.
புதுவை மாநிலத்தில் இதுவரை 10,03,013 பேருக்கு (முதல் தவணை - 6,91,872, இரண்டாவது தவணை -3,11,141) தடுப்பூசி செலுத்தப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...