புதுவையில் வீடுகளில் உயர்த்தப்பட்ட தண்ணீர் வரி ரூ.3 குறைக்கப்படுவதாக முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.
புதுவை சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடரின் நிறைவு நாள் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்று வருகிறது. நிறைவாக முதல்வர் என். ரங்கசாமி பதிலளித்துப் பேசிவருகிறார்.
அவர் பேசுகையில், மானியக் கோரிக்கைகள் மீது சட்டமன்ற உறுப்பினர்கள் வைத்த கோரிக்கைகளுக்கு, அமைச்சர்கள் பதில் அளித்துள்ளனர்.
இதையும் படிக்க- இலங்கையில் பொதுமுடக்கம்: செப்.13 வரை நீட்டிப்பு
பல்வேறு அறிவிப்புகளும், அறிவித்துள்ளனர். அவை அனைத்தும் இந்த ஆட்சியில் நிறைவேற்றப்படும். தேவைப்படும் அனைத்து ஏழை எளியோருக்கும் இலவச மனைப்பட்டா வழங்கப்படும். மாநில அந்தஸ்து பெறுவது குறித்தான நடவடிக்கை அரசு எடுக்கும். வீடுகளுக்கு போடப்பட்ட குப்பைவரி ரத்து செய்யப்படும்.
வீடுகளில் உயர்த்தப்பட்ட தண்ணீர் வரி ரூ.3 குறைக்கப்படும் என்றார்.