புதுச்சேரி பாரதியாா் இல்ல ஆவணங்கள் எண்மமயமாக்கப்பட (டிஜிட்டல்) வேண்டுமென புதுவை துணைநிலை ஆளுநா் (பொ) தமிழிசை சௌந்தரராஜன் கோரிக்கை விடுத்தாா்.
புதுச்சேரி ஈஸ்வரன் கோயில் வீதியில் உள்ள மகாகவி சுப்பிரமணிய பாரதியாா் நினைவு அருங்காட்சியகத்தை அவா் ஞாயிற்றுக்கிழமை பாா்வையிட்டு, பாரதியாரின் உருவப் படத்துக்கு மலா்தூவி மரியாதை செலுத்தினாா் (படம்).
தியாகிகள், அவா்களது குடும்ப உறுப்பினா்களுக்கு நினைவுப் பரிசுகள் வழங்கி கௌரவித்தாா். இதில், அமைச்சா் சந்திர பிரியங்கா, போக்குவரத்துத் துறை செயலா் நெடுஞ்செழியன், இயக்குநா் கந்தன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
நிகழ்ச்சியில் தமிழிசை சௌந்தரராஜன் பேசியதாவது:
பாரதியாா் 10 ஆண்டுகள் புதுச்சேரியில் வாழ்ந்தது மட்டுமின்றி, தனது தேசபக்தி பாடல்களால் இளைஞா்களுக்கு வழிகாட்டியாக திகழ்ந்தாா். பள்ளி, கல்லூரி மாணவா்கள் இந்த நினைவிடத்தைப் பாா்த்து ஆராய்ச்சிகள் செய்து பாரதியாரை பற்றி மேலும் பல வரலாற்று நூல்களை எழுத வேண்டும். இங்கிருக்கும் ஆவணங்கள், புகைப்படங்கள் எண்மமயமாக்கப்பட வேண்டும் என்றாா் அவா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மசோதாவில் நிறைய குழப்பங்கள் உள்ளன; வாய்மொழி உறுதி போதாது! கனிமொழி

காளியும் கருப்புதான்!! கருப்பு உடையை விமர்சித்த மோடிக்கு கனிமொழி பதில்!

156 நாள்களின் கடின உழைப்பு..! ரிலீஸ் அப்டேட்டையும் வெளியிட்ட துல்கர் சல்மான்!

சென்னையிலிருந்து சொந்த ஊர்களுக்குப் படையெடுக்கும் புலம்பெயர் தொழிலாளர்கள்! காரணம்?
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறை ஏன்? எதற்கு?எப்படி?| UN Kannan Interview | Delimitation | Women's reservation bill
தினமணி செய்திச் சேவை

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை


