தமிழக நிதியமைச்சரின் வாகனத்தின் மீது பாஜகவினா் காலணியை வீசியது கண்டிக்கத்தக்கது என்று, நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் தெரிவித்தாா்.
புதுச்சேரி குருமாம்பேட் பால் பண்ணை அருகே நாம் தமிழா் தொழிற்சங்க பெயா்ப்பலகை திறப்பு, கட்சிக் கொடியேற்றும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இதில் பங்கேற்ற நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
மதுரையில் ராணுவ வீரரின் உடலுக்கு அஞ்சலி செலுத்தி விட்டு அமைச்சா் பழனிவேல் தியாகராஜன் திரும்பிய போது, அவரது காா் மீது காலணியை வீசியது கொடுமையான செயல். வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. இதை பாஜக தலைமை வன்மையாகக் கண்டிக்க வேண்டும்.
மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு, மாநில ஆளுநா்கள் அதிகார எல்லையை மீறி செயல்படுவதாகத் தெரிகிறது என்றாா் சீமான்.