முதியோர் உதவித்தொகை ரூ.7000 ஆக உயர்த்தி வழங்கப்படும்: முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு

புதுச்சேரி மாநிலத்தில் 100 வயது கடந்த முதியோர்களுக்கு, முதியோர் உதவித்தொகை ரூ.7000-ம் ஆக  உயர்த்தி வழங்கப்படும் என முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.
முன்னாள் முதல்வர் ரங்கசாமி
முன்னாள் முதல்வர் ரங்கசாமி
Published on
Updated on
1 min read



புதுச்சேரி: புதுச்சேரி மாநிலத்தில் 100 வயது கடந்த முதியோர்களுக்கு, முதியோர் உதவித்தொகை ரூ.7000-ம் ஆக  உயர்த்தி வழங்கப்படும் என முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.

புதுச்சேரி சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடரில் திங்கள்கிழமை முதல்வர் ரங்கசாமி வெளியிட்ட அறிவிப்பு: 

புதுச்சேரி மாநிலத்தில் இருளர் இனம், பழங்குடியினம், நரிக்குறவர் குடும்பங்களுக்கு அவர்கள் வசிக்கும் பகுதிகளில், நிலம் ஆர்ஜீதம் செய்து இலவச மனைப்பட்டா வழங்கி, வீடு கட்டி தரப்படும். 

மேலும், பழங்குடியின மக்கள் மீது  எனக்கு அதிக அக்கரை உள்ளது. அவர்களுக்கு அனைத்து உதவிகளும் செய்து கொடுக்கப்படும்.

நூறு வயது கடந்த முதியோர்களுக்கு, முதியோர் உதவித்தொகை ரூ. 7000-ம் ஆக உயர்த்தி வழங்கப்படும் என முதல்வர் ரங்கசாமி அறிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com