தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!டெலிகிராம் தடைக்கு எதிரான மனு உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடி!தவெக நம்பிக்கை வாக்கெடுப்பு வழக்கு: உச்ச நீதிமன்றம் தள்ளுபடிமேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றம்! மேக்கேதாட்டு அணை! தமிழ்நாடு அரசுக்கு திமுக உறுதுணையாக இருக்கும்! உதயநிதி ஸ்டாலின்மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம்! தேமுதிக, பாமக ஆதரவு!மேக்கேதாட்டு அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசுக்கு கண்டனம்! அமைச்சர் ராஜேஷ்
/

புதுச்சேரியில் காலாவதியான நூடுல்ஸ் விற்றதாக புகார்: சமூக வலைதளங்களில் வைரல்!

புதுச்சேரி முதலியார்பேட்டை அம்பேத்கர் சாலையை சேர்ந்தவர் கேப்ரியல். இவர் உப்பளம் சாலையில் உள்ள சிவா என்கிற மளிகைக் கடையில் மிகப் பிரபலமான நிறுவனத்தின் நூடுல்ஸ் பாக்கெட்டை வாங்கி சென்றுள்ளார்.

News image
Updated On :13 டிசம்பர் 2022, 11:21 am IST

புதுச்சேரி முதலியார்பேட்டை அம்பேத்கர் சாலையை சேர்ந்தவர் கேப்ரியல். இவர் உப்பளம் சாலையில் உள்ள சிவா என்கிற மளிகைக் கடையில் மிகப் பிரபலமான நிறுவனத்தின் நூடுல்ஸ் பாக்கெட்டை வாங்கி சென்றுள்ளார்.

வீட்டிற்கு சென்று அதனுடைய காலாவதி தேதியை பார்த்தபோது AUG 2022 என்று இருந்ததை பார்த்த அவர், தான் வாங்கிய கடைக்கு வந்து ஏன் நான்கு மாதம் காலாவதியாகி உள்ள நூடுல்ஸ் பாக்கெட்டை கொடுத்தீர்கள் என கேள்வி எழுப்பி உள்ளார்.

ஆனால் கடைக்காரர்கள் இது நிறுவனத்திடம் இருந்து நேற்று தான் வாங்கினேன் என்றும், நீங்கள் பில் பெற்றுக் கொண்டு சென்று நிறுவனத்திடம் விசாரித்துக் கொள்ளுங்கள் என அலட்சியமாக பதில் அளித்துள்ளார். 

இதனையடுத்து கடையின் முன்பு நின்று காப்ரியல், இதுபோன்று விற்பனை செய்யும் கடை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என விடியோ பதிவிட்டு உள்ளார். தற்போது இந்த விடியோவானது அனைத்து சமூக வலைதளங்களிலும் பரவி வருகிறது.

இதுகுறித்து உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, புகார் பெற்றுக்கொண்டு இது குறித்து விசாரணை செய்யப்படும் என தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.