மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

புதுச்சேரியில் முகக்கவசம் அணிய ஆட்சியர் அறிவுறுத்தல்!

புதுச்சேரியில் பள்ளி, கல்லூரிகளில் மாணவர்கள் முகக்கவசம் அணிய வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.

News image
Updated On :27 டிசம்பர் 2022, 10:48 am

புதுச்சேரியில் பள்ளி, கல்லூரிகளில் மாணவர்கள் முகக்கவசம் அணிய வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.

பல்வேறு நாடுகளில் கரோனா நோய்த் தொற்று மீண்டும் பரவி வரும் நிலையில், மத்திய அரசின் அறிவுறுத்தல்படி நாடு முழுவதும் இன்று கரோனா தடுப்பு ஒத்திகை நிகழ்வு நடத்தப்பட்டது.

மேலும், கரோனா நெறிமுறைகளை கடைபிடிக்க மாநில அரசுகளுக்கு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

இந்நிலையில், புதுச்சேரியில் உள்ள கல்வி நிறுவனங்களில் கட்டாயம் முகக்கவசம் அணிய மாணவர்களுக்கு அறிவுறுத்த வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

முன்னதாக கர்நாடகத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளில் மாணவர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்று அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் நேற்றி அறிவுறுத்தியிருந்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.