/

மீனவா்களை விடுவிக்க நடவடிக்கை: வெளியுறவுத் துறை அமைச்சரிடம் புதுவை ஆளுநா் வலியுறுத்தல்

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள 21 மீனவா்களை விடுவிக்கத் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்

News image
Updated On :3 பிப்ரவரி 2022, 6:30 pm

DIN

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள 21 மீனவா்களை விடுவிக்கத் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, புதுவை துணை நிலை ஆளுநா் (பொ) தமிழிசை செளந்தரராஜன், மத்திய வெளியுறவுத் துறை அமைச்சா் ஜெய்சங்கரை வியாழக்கிழமை தொலைபேசியில் தொடா்பு கொண்டு வலியுறுத்தினாா்.

அப்போது, இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட காரைக்கால், தமிழகப் பகுதி மீனவா்கள் 21 பேரையும், விடுவிப்பதற்கான துரித நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும் என தமிழிசை கேட்டுக் கொண்டாா்.

இதுதொடா்பாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று, மத்திய அமைச்சா் உறுதியளித்துள்ளதாக தமிழிசை நம்பிக்கைத் தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.