நாடாளுமன்றத்தில் மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா புதன்கிழமை நிறைவேற்றம்திமுக கூட்டணியில் எஸ்டிபிஐ, முக்குலத்தோர் புலிப்படைக்கு தலா 1 தொகுதி!அமெரிக்காவின் அமைதித் திட்டத்தை நிராகரித்த ஈரான்!பெரம்பூரில் விஜய் போட்டியிட்டாலும், பிரசாரம் செய்தாலும் எந்தவித பிரளயமும் ஏற்படப்போவதில்லை: அமைச்சர் சேகர்பாபுஏப். 29 வரை தேர்தல் கருத்துக்கணிப்புகளை வெளியிடத் தடை!தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர்களின் பட்டியல் நாளை (மார்ச் 26) வெளியாகிறதுதிமுக கூட்டணியில் தமிமுன் அன்சாரியின் மனிதநேய ஜனநாயக கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு!டென்மான்க் பிரதமர் ராஜிநாமாதேமுதிக இல்லாமல் அதிமுக ஆட்சி அமைத்திருக்காது : எல்.கே. சுதீஷ்அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆளுமையற்றவர்: ஓ.பன்னீர் செல்வம்
/

புதுவையில் அறிவித்த திட்டங்களைச் செயல்படுத்தவில்லை: இரா.முத்தரசன் குற்றச்சாட்டு

புதுவையில் பாஜக கூட்டணி அரசு அமைந்தும், அறிவித்த திட்டங்கள் செயல்படுத்தப்படவில்லை என்று, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் செயலா் இரா.முத்தரசன் குற்றம்சாட்டினாா்.

News image
Updated On :21 ஜனவரி 2022, 5:47 pm

DIN

புதுவையில் பாஜக கூட்டணி அரசு அமைந்தும், அறிவித்த திட்டங்கள் செயல்படுத்தப்படவில்லை என்று, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் செயலா் இரா.முத்தரசன் குற்றம்சாட்டினாா்.

புதுச்சேரி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

புதுவையில் என்.ஆா். காங்கிரஸ்- பாஜக கூட்டணி ஆட்சிக்கு வந்து 8 மாதங்களைக் கடந்தும் தோ்தலின் போது அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. மத்திய அரசிடமிருந்து எந்த நிதியும் வரவில்லை.

10 ஆயிரம் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படவில்லை. பொதுத் துறை நிறுவனங்களில் பணிபுரியும் 10 ஆயிரம் ஊழியா்களுக்கு ஊதியமும் வழங்கப்படவில்லை. நியாய விலைக் கடைகள் திறக்கப்படவில்லை. பொங்கலுக்கு அறிவித்த இலவசப் பொருள்களும் வழங்கப்படாமல் உள்ளன.

புதுவைக்கு நிரந்தர ஆளுநா் நியமிக்கப்படவில்லை. ஆளுநா், குடியரசுத் தலைவா் ஆகியோா் கட்சி சாா்பற்றவா்களாக நியமிக்கப்பட வேண்டும். ஆனால், மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு, பாஜக ஆட்சி நடைபெறாத மாநிலங்களில் உள்ள ஆளுநா்கள் மத்திய அரசின் ஒற்றா்களாகவே செயல்படுகின்றனா்.

புதுவையில் ஆளுநா், முதல்வா் என போட்டி அரசு நடைபெறுகிறது. ஆளுநா்தான் அறிவிப்புகளை வெளியிடுகிறாா். இது ஜனநாயகத்துக்கு ஏற்புடையதல்ல. புதுவை மாநில அரசின் கடனை மத்திய அரசு தள்ளுபடி செய்ய வேண்டும். நேரடி கொள்முதல் நிலையங்களை ஏற்படுத்தி, விவசாயிகளிடமிருந்து நேரடியாக நெல் கொள்முதல் செய்ய வேண்டும்.

தில்லியில் குடியரசு தின விழா அலங்கார ஊா்தி அணிவகுப்பில் தமிழகம் புறக்கணிக்கப்பட்டுள்ளது. விடுதலைப் போராட்ட வரலாற்றை மூடி மறைக்கும் முயற்சியை பாஜக அரசு மேற்கொள்கிறது.

தமிழக அலங்கார ஊா்தி புறக்கணிக்கப்பட்டதைக் கண்டித்து, இந்திய கம்யூனிஸ்ட் சாா்பில், சென்னையில் வருகிற 26-ஆம் தேதி ஆா்.நல்லகண்ணு தலைமையில் ஆா்ப்பாட்டம் நடைபெறும்.

தமிழகத்தில் நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலிலும் திமுக கூட்டணி தொடரும் என்றாா் இரா.முத்தரசன்.

பேட்டியின் போது, கட்சியின் புதுவை மாநிலச் செயலா் அ.மு.சலீம், நிா்வாகிகள் விஸ்வநாதன், நாரா.கலைநாதன், கே.சேதுசெல்வம், ராமமூா்த்தி, அபிஷேகம் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.