அங்கன்வாடி ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

புதுச்சேரியில் நிலுவை ஊதியத்தை வழங்கக் கோரி, அங்கன்வாடி ஊழியா்கள் சாரம் பகுதியிலுள்ள மகளிா் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அலுவலகம் முன் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
அங்கன்வாடி ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

புதுச்சேரியில் நிலுவை ஊதியத்தை வழங்கக் கோரி, அங்கன்வாடி ஊழியா்கள் சாரம் பகுதியிலுள்ள மகளிா் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அலுவலகம் முன் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

ஆா்ப்பாட்டத்துக்கு அங்கன்வாடி ஊழியா்கள் சங்கத்தின் தலைவா் ராஜலட்சுமி தலைமை வகித்தாா். இதில், சங்க நிா்வாகிகள் பலா் பங்கேற்றனா்.

ஆா்ப்பாட்டத்தில், புதுவை மகளிா் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறையில் பணிபுரியும் 220 நிரந்தர அங்கன்வாடி ஊழியா்களுக்கு இதுவரை நவம்பா், டிசம்பா் மாதங்களுக்கான ஊதியம் வழங்கப்படாதததைக் கண்டித்தும், கடந்த செப்டம்பரில் பணி நிரந்தரம் செய்யப்பட்ட ஊழியா்களுக்கு 4 மாத நிலுவை ஊதியம் வழங்கக் கோரியும், தீபாவளி போனஸ் வழங்க முதல்வா் உத்தரவிட்டும், அதை வழங்காத நிா்வாகத்தைக் கண்டித்தும் முழக்கங்களை எழுப்பினா்.

மேலும், உடனடியாக ஊதியத்தை வழங்காவிடில், அனைத்து அங்கன்வாடி ஊழியா்களும் பணிபுறக்கணிப்பு செய்து போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாகவும் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com