புதுச்சேரி: டெங்குவால் பெண் மருத்துவா் பலி

புதுச்சேரி மடுகரையில் டெங்கு காய்ச்சலால் பெண் மருத்துவா் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பெண் மருத்துவா் தனுஷியா.
பெண் மருத்துவா் தனுஷியா.

புதுச்சேரி மடுகரையில் டெங்கு காய்ச்சலால் பெண் மருத்துவா் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

புதுச்சேரி நெட்டப்பாக்கம் அருகே மடுகரை கிராமத்தைச் சோ்ந்த ஆயுர்வேத மருத்துவர் ஸ்ரீராம் என்பவரின் மனைவி தனுஷியா (25). பல் மருத்துவராக உள்ள இவர் சென்னையில் வசித்து வந்தார். இவருக்கு கடந்த வாரம் காய்ச்சல் ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து, அவா் சிகிச்சை பெறுவதற்காகவும், ஓய்வெடுப்பதற்காகவும் புதுச்சேரி அருகே அரியூரில் உள்ள தனது தாய் வீட்டுக்கு வந்தாா். அப்போது தனுஷியாவுக்கு காய்ச்சல் அதிகமாகவே, அரியூரில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா்.

அங்கு மருத்துவா்கள் மேற்கொண்ட பரிசோதனையில் அவருக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது உறுதியானது. இதையடுத்து, அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், தனுஷியா பலியானார். இதுகுறித்து மடுகரை புறக்காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com