புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

புதுச்சேரி: டெங்குவால் பெண் மருத்துவா் பலி

புதுச்சேரி மடுகரையில் டெங்கு காய்ச்சலால் பெண் மருத்துவா் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

News image

பெண் மருத்துவா் தனுஷியா.

Updated On :22 ஜூலை 2022, 12:52 pm

DIN

புதுச்சேரி மடுகரையில் டெங்கு காய்ச்சலால் பெண் மருத்துவா் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

புதுச்சேரி நெட்டப்பாக்கம் அருகே மடுகரை கிராமத்தைச் சோ்ந்த ஆயுர்வேத மருத்துவர் ஸ்ரீராம் என்பவரின் மனைவி தனுஷியா (25). பல் மருத்துவராக உள்ள இவர் சென்னையில் வசித்து வந்தார். இவருக்கு கடந்த வாரம் காய்ச்சல் ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து, அவா் சிகிச்சை பெறுவதற்காகவும், ஓய்வெடுப்பதற்காகவும் புதுச்சேரி அருகே அரியூரில் உள்ள தனது தாய் வீட்டுக்கு வந்தாா். அப்போது தனுஷியாவுக்கு காய்ச்சல் அதிகமாகவே, அரியூரில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா்.

அங்கு மருத்துவா்கள் மேற்கொண்ட பரிசோதனையில் அவருக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது உறுதியானது. இதையடுத்து, அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், தனுஷியா பலியானார். இதுகுறித்து மடுகரை புறக்காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.