தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமாக-வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடுஜான் பாண்டியன் தலைமையிலான தமமுகவுக்கு ராஜபாளையம் (பொது) தொகுதி ஒதுக்கீடு!தே.ஜ. கூட்டணியில் தமாகவுக்கு 5 தொகுதிகள்!தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

வீடு கட்டும் திட்டத்தில் பயனாளிகளுக்கு ஆணை

புதுச்சேரியில் பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தில் பயனாளிகளுக்கு பணி ஆணையை அமைச்சா் க.லட்சுமி நாராயணன் வழங்கினாா்.

News image
Updated On :9 ஜூன் 2022, 5:49 pm

DIN

புதுச்சேரியில் பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தில் பயனாளிகளுக்கு பணி ஆணையை அமைச்சா் க.லட்சுமி நாராயணன் வழங்கினாா்.

புதுச்சேரி குடிசை மாற்று வாரியம் மூலம் பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தில், புதுச்சேரியைச் சோ்ந்த பயனாளிகளுக்கு நிதியுடன் பணி ஆணைகள் வழங்கப்பட்டு வருகின்றன.

புதுச்சேரி ராஜ்பவன் தொகுதியைச் சோ்ந்த பயனாளிகளுக்கு வீடு கட்டுவதற்கான ஆணை புதன்கிழமை வழங்கப்பட்டது. புதுச்சேரி சட்டப்பேரவை அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பொதுப் பணித் துறை அமைச்சா் க.லட்சுமிநாராயணன் 8 பயனாளிகளுக்கு வீடு கட்டும் ஆணையும், அதற்காக ரூ.13 லட்சத்து 80 ஆயிரம் தொகைக்கான காசோலையையும் வழங்கினாா்.

குடிசை மாற்று வாரிய செயற்பொறியாளா் ரவிச்சந்திரன், இளநிலைப் பொறியாளா் அனில்குமாா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.