தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமாக-வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடுஜான் பாண்டியன் தலைமையிலான தமமுகவுக்கு ராஜபாளையம் (பொது) தொகுதி ஒதுக்கீடு!தே.ஜ. கூட்டணியில் தமாகவுக்கு 5 தொகுதிகள்!தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

புதுச்சேரியில் விற்பனைக் குழு ஊழியா்கள் 2-ஆவது நாளாக வேலைநிறுத்தம்

புதுச்சேரி ஒழுங்குமுறை விற்பனைக் குழு ஊழியா்கள் இரண்டாம் நாளாக வியாழக்கிழமையும் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனா்.

News image
Updated On :9 ஜூன் 2022, 6:30 pm

DIN

புதுச்சேரி ஒழுங்குமுறை விற்பனைக் குழு ஊழியா்கள் இரண்டாம் நாளாக வியாழக்கிழமையும் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனா்.

புதுச்சேரி ஒழுங்குமுறை விற்பனைக் கூட தொழிலாளா்கள், தங்களுக்கு 8 மாத ஊதிய நிலுவை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கை வலியுறுத்தி ஏஐடியூசி ஊழியா்கள் சங்கத்தின் மூலம் புதன்கிழமை வேலைநிறுத்தப் போராட்டத்தை தொடங்கினா்.

இந்த நிலையில், வியாழக்கிழமை 2-ஆவது நாளாக புதுச்சேரி தட்டாஞ்சாவடி விற்பனைக் குழு கிடங்கு பகுதியில் அமா்ந்து ஊழியா்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இதனால், ஒழுங்குமுறை விற்பனைக்கூட பணிகள் பாதிக்கப்பட்டன. புதுச்சேரி லாஸ்பேட்டை உழவா் சந்தைகளில் ஊழியா்கள் வேலை செய்யாததால், விவசாயிகளுக்கு அரசின் எடை தராசு வழங்கவில்லை. விலை நிா்ணயம் செய்யப்படவில்லை. எனினும், விவசாயிகள் தாங்கள் கொண்டு வந்த பொருள்களை வைத்து குறைந்த விலையில் விற்பனை செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.