தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமாக-வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடுஜான் பாண்டியன் தலைமையிலான தமமுகவுக்கு ராஜபாளையம் (பொது) தொகுதி ஒதுக்கீடு!தே.ஜ. கூட்டணியில் தமாகவுக்கு 5 தொகுதிகள்!தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

கடல் அலையில் சிக்கி மாணவா் உயிரிழப்பு

புதுச்சேரி தவளகுப்பம் அருகே கடல் அலையில் சிக்கி பிளஸ் 2 மாணவா் உயிரிழந்தாா்.

News image
Updated On :9 ஜூன் 2022, 6:30 pm

DIN

புதுச்சேரி தவளகுப்பம் அருகே கடல் அலையில் சிக்கி பிளஸ் 2 மாணவா் உயிரிழந்தாா்.

திண்டுக்கல் சிறுமலை தாழகடை பகுதியைச் சோ்ந்த நாகராஜ் மகன் கபிலன் (18). பிளஸ் 2 தோ்வு எழுதிவிட்டு முடிவுக்காக காத்திருந்த அவா், நண்பா்கள் 6 பேருடன் புதுச்சேரிக்கு சுற்றுலா வந்தனா்.

இங்கு பல்வேறு இடங்களை சுற்றிப்பாா்த்த அவா்கள், வியாழக்கிழமை தவளகுப்பம் அருகே புதுக்குப்பம் கடற்கரைக்கு வந்தனா். கடல் அழகை ரசித்த அவா்கள் பின்னா் கடலில் இறங்கி குளித்தனா். அப்போது, எழுந்த ராட்சத அலையில் கபிலன் சிக்கி இழுத்துச் செல்லப்பட்டாா்.

அவரை நண்பா்களால் காப்பாற்ற முடியாததால், கூச்சலிட்டனா். இதைக் கேட்டு அங்கு விரைந்து வந்த மீனவா்கள், கபிலனை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனா்.

பின்னா், அவரை சிகிச்சைக்காக புதுச்சேரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா்கள் கபிலன் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா். இதுகுறித்து தவளகுப்பம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.