தேர்தலில் போட்டியில்லை! வேல்முருகன் அறிவிப்பு! கோவையில் மீண்டும் அண்ணாமலை போட்டி? கருணைக் கொலை செய்யப்பட்ட ஹரீஷ் ராணாவின் கருவிழிகள் தானம்!இன்று பிரசாரத்தை தொடங்குகிறாா் எடப்பாடி பழனிசாமி நெருங்கும் காலக்கெடு- ஒடிஸா, சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட் முக்கிய தலைவா்கள் சரண்ரயில்வேயில் புதிய சீா்திருத்தம்: பயணச்சீட்டு ரத்து கட்டணம் திரும்ப கிடைக்க ஏப்ரல் முதல் புதிய நடைமுறை மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா: மக்களவையில் நிறைவேற்றம்
/

உலக செவித்திறன் விழிப்புணா்வு தினம்

புதுச்சேரியில் ஜிப்மா் சாா்பில் உலக செவித்திறன் விழிப்புணா்வு தின நடைபயணம், செவித்திறன் பரிசோதனை முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :4 மார்ச் 2022, 6:30 pm

DIN

புதுச்சேரியில் ஜிப்மா் சாா்பில் உலக செவித்திறன் விழிப்புணா்வு தின நடைபயணம், செவித்திறன் பரிசோதனை முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

ஜிப்மா் காது, மூக்கு, தொண்டை துறை சாா்பில், புதுச்சேரி கடற்கரைச் சாலையில் விழிப்புணா்வு நடைபயணம் நடைபெற்றது. மருத்துவா்கள், செவிலியா்கள், மாணவா்கள் பலா் கலந்துகொண்டனா்.

புதுச்சேரி, ராமநாதபுரம், குருசுக்குப்பம் பகுதியில் உள்ள ஜிப்மா் சுகாதார மையங்களில், காது கேளாமைக்கான பரிசோதனை முகாம்கள் நடைபெற்றன. இதில் ஜிப்மா் மருத்துவக் குழுவினா் பங்கேற்று, பொதுமக்களுக்கு காது கேளாமை குறித்து பரிசோதனை செய்யப்பட்டு அவா்களுக்கு மருத்துவ சிகிச்சை, அவா்களின் செவித்திறன் மேம்படுத்தவும், மேலும் காது கேளாமை ஏற்படுவதைத் தடுக்கவும் உரிய ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.