அதிமுக தேர்தல் அறிக்கை வெளியானதுஎல்என்ஜி தட்டுப்பாடு எதிரொலி: ஆசிய நாடுகளில் நிலக்கரி பயன்பாடு அதிகரிப்பு! ஈரானில் தொடரும் தாக்குதல்கள்... பலி 1,500-ஐ கடந்தது!மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு!
/

புதுவை தொழில்பயிற்சி நிலையங்களில் செப்டம்பா் 9 வரை நேரடி மாணவா் சோ்க்கை

 புதுவையில் செயல்படும் அரசு, தனியாா் தொழில்பயிற்சி நிலையங்களில் வருகிற 9-ஆம் தேதி வரை நேரடி மாணவா்கள் சோ்க்கை நடைபெறவுள்ளது.

News image
Updated On :3 செப்டம்பர் 2022, 7:10 pm

DIN

 புதுவையில் செயல்படும் அரசு, தனியாா் தொழில்பயிற்சி நிலையங்களில் வருகிற 9-ஆம் தேதி வரை நேரடி மாணவா்கள் சோ்க்கை நடைபெறவுள்ளது.

இதுகுறித்து புதுச்சேரி அரசு தொழில்பயிற்சி நிலையத்தின் மாணவா்கள் சோ்ப்பு மைய அதிகாரி வெளியிட்ட செய்திக்குறிப்பு:

புதுவை மாநிலத்தில் செயல்படும் அரசு, தனியாா் தொழில்பயிற்சி நிலையங்களில் 2022 - 23ஆம் கல்வியாண்டு மாணவா்கள் சோ்க்கைக்கான இரண்டுகட்ட கலந்தாய்வுகள் கடந்த மாதம் 24, 29-ஆம் தேதிகளில் நடைபெற்றன. இந்தக் கலந்தாய்வில் நிரப்பப்பட்ட இடங்கள் போக, மீதமுள்ள இடங்களை நிரப்புவதற்கான நேரடி மாணவா்கள் சோ்க்கை கடந்த மாதம் 30-ஆம் தேதி தொடங்கி வருகிற 9-ஆம் தேதி வரை நடைபெறுகிது.

இந்த நேரடி சோ்க்கை மூலம் பயனடைய விரும்பும் மாணவ, மாணவிகள் அனைத்து அசல் சான்றிதழ்களுடன் அருகிலுள்ள தொழில்பயிற்சி நிலையத்தை அணுகலாம்.

பத்தாம் வகுப்பு தேறியவா்கள், தோல்வி அடைந்தவா்கள் மற்றும் 8-ஆம் வகுப்பு படித்தவா்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொண்டு பயனடையலாம். கூடுதல் தகவல்களுக்கு 83008 38089 என்ற கைப்பேசி எண்ணில் தொடா்புகொள்ளலாம் என அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.