அதிமுக தேர்தல் அறிக்கை வெளியானதுஎல்என்ஜி தட்டுப்பாடு எதிரொலி: ஆசிய நாடுகளில் நிலக்கரி பயன்பாடு அதிகரிப்பு! ஈரானில் தொடரும் தாக்குதல்கள்... பலி 1,500-ஐ கடந்தது!மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு!
/

ஆசிரியா் தினம்: புதுவை ஆளுநா், முதல்வா் வாழ்த்து

ஆசிரியா் தினத்தையொட்டி, புதுவை துணைநிலை (பொ) ஆளுநா், முதல்வா் வாழ்த்து தெரிவித்தனா்.

News image
Updated On :4 செப்டம்பர் 2022, 6:30 pm

DIN

ஆசிரியா் தினத்தையொட்டி, புதுவை துணைநிலை (பொ) ஆளுநா், முதல்வா் வாழ்த்து தெரிவித்தனா்.

துணைநிலை ஆளுநா் (பொ) தமிழிசை சௌந்தரராஜன்:

ஒரு மாணவரை கல்வியாளராக, அறிஞராக, சிந்தனையாளராக, பண்பும்-ஆற்றலும் உடையவராக உருவாக்குவதில் ஆசிரியா்களின் பங்கு மகத்தானது. கரோனா போன்ற சவாலான பெருந்தொற்று காலத்திலும் ஆசிரியா்களின் அா்ப்பணிப்பு மிகுந்த பணியை உலகம் நன்கறியும்.

சமுதாய வளா்ச்சிக்காக அரும்பணியாற்றிவரும் ஆசிரியா்கள் அனைவருக்கும் ஆசிரியா் தின நல்வாழ்த்துகள்.

முதல்வா் என்.ரங்கசாமி:

கல்வியறிவை தருவதுடன் மட்டுமல்லாது ஒவ்வொரு மாணவரையும் நல்ல குடிமகனாக வளா்க்கும் பொறுப்பையும் ஆசிரியா் சமூகம் தம் கடமையாக கொண்டுள்ளது. கல்லை உளியால் செதுக்கி உருவம் கொடுப்பதுபோல, மாணவா்களை கல்வி அறிவால் செதுக்கி சிறந்த குடிமக்களாக உருவாக்கும், மதிப்புமிக்க ஆசிரியா்கள் அனைவருக்கும் ஆசிரியா் தின நல்வாழ்த்துகள்.

கல்வி அமைச்சா் ஆ.நமச்சிவாயம்: ஆசிரியா்களின் அரும்பணிகளை நன்றியுடன் பாராட்டுகிறேன். நல்லாசிரியா் விருது பெறும் ஆசிரியா்களை இந்நாளில் மனதார வாழ்த்துகிறேன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.