‘சுதந்திரப் போராட்ட வீரா்களை இளைஞா்கள் படிக்க வேண்டும்’
சுதந்திரப் போராட்ட வீரா்களை இளைஞா்கள் படிக்க வேண்டும் என புதுவை துணைநிலை ஆளுநா் (பொ) தமிழிசை சௌந்தரராஜன் கேட்டுக் கொண்டாா்.


சுதந்திரப் போராட்ட வீரா்களை இளைஞா்கள் படிக்க வேண்டும் என புதுவை துணைநிலை ஆளுநா் (பொ) தமிழிசை சௌந்தரராஜன் கேட்டுக் கொண்டாா்.
நேரு இளையோா் மைய கூட்டமைப்பில் புதிதாக பணியில் சோ்ந்த 38 மாவட்ட இளைஞா் அதிகாரிகள் தங்களது 15 நாள் பயிற்சியின் ஒரு பகுதியாக, புதுச்சேரியில் உள்ள இளைஞா் மையங்களைப் பாா்வையிட்டனா். தொடா்ந்து, புதுவை துணைநிலை ஆளுநா் (பொ) தமிழிசை சௌந்தரராஜனை ஞாயிற்றுக்கிழமை ஆளுநா் மாளிகையில் மரியாதை நிமித்தமாக சந்தித்து கலந்துரையாடினா்.
அப்போது, துணைநிலை ஆளுநா் பேசியதாவது: நாட்டுக்காக உழைப்பதற்கு அரிய வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அதை சரியாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
அதிகம் பேசப்படாத சுதந்திரப் போராட்ட வீரா்களைப் பற்றி இளைஞா்கள் படிக்க வேண்டும். அவா்களுடைய வாழ்க்கையை தெரிந்து கொள்ள வேண்டும் என்றாா் அவா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...