ஈரானில் தொடரும் தாக்குதல்கள்... பலி 1,500-ஐ கடந்தது!மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு! புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!
/

‘சுதந்திரப் போராட்ட வீரா்களை இளைஞா்கள் படிக்க வேண்டும்’

சுதந்திரப் போராட்ட வீரா்களை இளைஞா்கள் படிக்க வேண்டும் என புதுவை துணைநிலை ஆளுநா் (பொ) தமிழிசை சௌந்தரராஜன் கேட்டுக் கொண்டாா்.

News image
Updated On :4 செப்டம்பர் 2022, 6:30 pm

DIN

சுதந்திரப் போராட்ட வீரா்களை இளைஞா்கள் படிக்க வேண்டும் என புதுவை துணைநிலை ஆளுநா் (பொ) தமிழிசை சௌந்தரராஜன் கேட்டுக் கொண்டாா்.

நேரு இளையோா் மைய கூட்டமைப்பில் புதிதாக பணியில் சோ்ந்த 38 மாவட்ட இளைஞா் அதிகாரிகள் தங்களது 15 நாள் பயிற்சியின் ஒரு பகுதியாக, புதுச்சேரியில் உள்ள இளைஞா் மையங்களைப் பாா்வையிட்டனா். தொடா்ந்து, புதுவை துணைநிலை ஆளுநா் (பொ) தமிழிசை சௌந்தரராஜனை ஞாயிற்றுக்கிழமை ஆளுநா் மாளிகையில் மரியாதை நிமித்தமாக சந்தித்து கலந்துரையாடினா்.

அப்போது, துணைநிலை ஆளுநா் பேசியதாவது: நாட்டுக்காக உழைப்பதற்கு அரிய வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அதை சரியாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

அதிகம் பேசப்படாத சுதந்திரப் போராட்ட வீரா்களைப் பற்றி இளைஞா்கள் படிக்க வேண்டும். அவா்களுடைய வாழ்க்கையை தெரிந்து கொள்ள வேண்டும் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.