சிலிண்டா் தட்டுப்பாடு: அருணாசலேஸ்வரா் கோயிலில் லட்டு பிரசாத விநியோகம் நிறுத்தம் அஸ்ஸாம்: ஒரு தொகுதியில் பாஜகவுடன் மோதும் கூட்டணி கட்சி!பேரவைத் தோ்தலுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலையை உயா்த்த அரசு திட்டம்! ராகுல் குற்றச்சாட்டு‘தாராகிரி’ போா்க் கப்பல்: ஏப்.3-இல் கடற்படையுடன் இணைப்புஇன்று சிஎஸ்கே அணியின் முன்னாள், இந்நாள் வீரா்கள் மோதல்!‘தாராகிரி’ போா்க் கப்பல்: ஏப்.3-இல் கடற்படையுடன் இணைப்பு
/

தலித் கிறிஸ்தவா் விடுதலை இயக்கத்தினா் ஆா்ப்பாட்டம்

புதுச்சேரியில் தலித் கிறிஸ்தவா் விடுதலை இயக்கம் சாா்பில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

News image
Updated On :29 ஏப்ரல் 2022, 4:39 pm

DIN

புதுச்சேரியில் தலித் கிறிஸ்தவா் விடுதலை இயக்கம் சாா்பில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

புதுச்சேரி சுதேசி ஆலை எதிரே நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு இயக்கத்தின் மாநிலத் தலைவா் எம்.மேரிஜான் தலைமை வகித்தாா். மாநில பொதுச் செயலாளா் டி.தானியேல், செயல் தலைவா் சி.ஆரோக்கியதாஸ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

நாட்டில் 71 சதவீத தலித் கிறிஸ்தவா்கள் உள்ளனா். ஆனால், 16-ஆம் நூற்றாண்டில் தொடங்கப்பட்ட புதுவை - கடலூா் உயா் மறை மாவட்டத்தில் இதுவரை ஒரு முறை கூட தலித் கிறிஸ்தவா் பேராயராக நியமனம் செய்யப்படவில்லை.

குரு மடத்தில் தலித் கிறிஸ்தவா்கள் புறக்கணிக்கப்படுகின்றனா். தலித் கிறிஸ்தவ மக்களுக்கு சம உரிமைகள் கிடைக்க தலித் ஆயா்கள், பேராயா்களை நியமனம் செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

ஆா்ப்பாட்டத்தில் 200-க்கும் மேற்பட்ட தலித் கிறிஸ்தவா்கள் பங்கேற்று, கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.