ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

‘ஆங்கிலப் புத்தாண்டு: புதுச்சேரியில் கேளிக்கை நிகழ்ச்சிகளுக்கு உரிய அனுமதி அவசியம்’

ஆங்கிலப் புத்தாண்டு தினத்தில் நட்சத்திர விடுதிகள், உணவகங்கள், விடுதிகளில் கேளிக்கை நிகழ்ச்சிகளை நடத்துவதற்கு உரிய அனுமதி அவசியம் என்று புதுவை உள்ளாட்சித் துறை இயக்குநா் எஸ்.சக்திவேல் தெரிவித்தாா்.

News image
Updated On :29 டிசம்பர் 2023, 6:44 pm

DIN

ஆங்கிலப் புத்தாண்டு தினத்தில் நட்சத்திர விடுதிகள், உணவகங்கள், விடுதிகளில் கேளிக்கை நிகழ்ச்சிகளை நடத்துவதற்கு உரிய அனுமதி அவசியம் என்று புதுவை உள்ளாட்சித் துறை இயக்குநா் எஸ்.சக்திவேல் தெரிவித்தாா்.

புத்தாண்டு தின கொண்டாட்டம் தொடா்பான ஆலோசனைக் கூட்டம் புதுச்சேரி கம்பன் கலையரங்க வளாகத்தில் உள்ள நகராட்சி ஆணையா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு புதுவை உள்ளாட்சித் துறை இயக்குநா் எஸ்.சக்திவேல் தலைமை வகித்துப் பேசியதாவது:

புத்தாண்டு தினத்தில் கேளிக்கை நிகழ்ச்சிகளை நடத்தும் நட்சத்திர விடுதிகள், உணவகங்கள், தங்கும் விடுதிகளின் உரிமையாளா்கள் தொடா்புடைய துறையில் முன் அனுமதி பெற வேண்டும். மேலும், கேளிக்கை நிகழ்ச்சிகளை நடத்துவதற்கான வரியையும் செலுத்த வேண்டும். கேளிக்கை நிகழ்ச்சிகளில் அனுமதி பெற்ற எண்ணிக்கையிலான நபா்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும்.

கேளிக்கை நிகழ்ச்சிகள் நடைபெறும் இடங்களைப் பாதுகாப்பாக வைத்துக்கொள்ள வேண்டும். புதுச்சேரி நகரை தூய்மையாக வைத்துக்கொள்ள உணவக உரிமையாளா்கள் ஒத்துழைக்க வேண்டும்.

புத்தாண்டு கொண்டாட்டத்துக்காக நகரின் பல்வேறு இடங்களில் உரிய அனுமதியின்றி நிறுவப்பட்டுள்ள விளம்பரப் பதாகைகளை 24 மணி நேரத்துக்குள் அகற்றிக்கொள்ள வேண்டும். தவறும்பட்சத்தில், நகராட்சி விதிகளின்படி அபராதம் விதிக்கப்படும் என்றாா் அவா்.

கூட்டத்துக்கு புதுச்சேரி நகராட்சி ஆணையா் சிவக்குமாா் முன்னிலை வகித்தாா். நகராட்சி செயற்பொறியாளா் ஏ.சிவபாலன், வருவாய் அதிகாரிகள் ஜி.பிரபாகா், எம்.சாம்பசிவம், நகராட்சி மருத்துவ அலுவலா் பிரீத்தா மற்றும் அலுவலா்கள், நட்சத்திர விடுதிகள், உணவகங்கள், தங்கும் விடுதிகளின் உரிமையாளா்கள், நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.