நடுக்கடலில்  பதாகைகள் வைத்து பிறந்த நாளை கொண்டாடிய விஜய் ரசிகர்கள்!

புதுச்சேரியில் நடிகர் விஜய் பிறந்தநாளை கொண்டாடும் வகையில் விஜய் ரசிகர்கள் நடுக்கடலில் பதாகைகள் வைத்தனர். 
நடுக்கடலில்  பதாகைகள் வைத்து பிறந்த நாளை கொண்டாடிய விஜய் ரசிகர்கள்!

புதுச்சேரியில் நடிகர் விஜய் பிறந்தநாளை கொண்டாடும் வகையில் விஜய் ரசிகர்கள் நடுக்கடலில் பதாகைகள் வைத்தனர். 

புதுச்சேரியில் நடிகர்கள், அரசியல் தலைவர்களின் பிறந்த நாளின் போது அவர்களது ரசிகர்கள் மற்றும் ஆதரவாளர்கள் நடுக்கடலில் பதாகைகள் வைத்து கொண்டாடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். 

நடிகர் விஜய் பிறந்த நாளை கொண்டாடும் வகையில் புதுச்சேரியை சேர்ந்த விஜய் மக்கள் இயக்கம் சார்பாக பல்வேறு நலத்திட்ட உதவிகள் மற்றும் மாநிலம் முழுவதும் பதாகைகள் வைத்து கொண்டாடி வருகின்றனர். 

அதன் ஒரு பகுதியாக புதுச்சேரி காந்தி சிலை பின்பு நடுக்கடலில் படகு மூலம் சென்று விஜய் ரசிகர்கள் பதாகைகள் வைத்து வாழ்த்து தெரிவித்துள்ளனர். மேலும், அதனை சமூக வலைதளத்தில் வைரலாக்கி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com