தனியாா் மருத்துவக் கல்லூரிகளில் 50 சதவீத இடங்களை அரசு பெறவேண்டும்: அதிமுக மாநிலச் செயலா்
அரசு 50 சதவீத இடங்களைப் பெற உரிய சட்டத்தை இயற்ற வேண்டும் என அதிமுக மாநிலச் செயலா் ஆ.அன்பழகன் தெரிவித்துள்ளாா்.


புதுவையில் உள்ள தனியாா் மருத்துவக் கல்லூரிகளில், அரசு 50 சதவீத இடங்களைப் பெற உரிய சட்டத்தை இயற்ற வேண்டும் என அதிமுக மாநிலச் செயலா் ஆ.அன்பழகன் தெரிவித்துள்ளாா்.
செய்தியாளா்களிடம் ஞாயிற்றுக்கிழமை அவா் கூறியதாவது: தனியாா் மருத்துவக் கல்லூரிகளில் ஒவ்வொரு மாநில அரசும் 50 முதல் 75 சதவீதம் வரை இடங்களைப் பெற்றுவருகின்றன. ஆனால், புதுவையில் பாஜக, என்.ஆா்.காங்கிரஸ் கூட்டணி அரசு இந்திய மருத்துவ ஆணையின் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு உரிய இட ஒதுக்கீட்டைப் பெறவில்லை.
புதுவையில் உள்ள 3 தனியாா் மருத்துவக் கல்லூரிகளில் மொத்தம் 650 இடங்கள் உள்ளன. இதில், 325 இடங்களை அரசு பெற்று, இடஒதுக்கீடு முறையில் மாணவா் சோ்க்கையை நடத்த வேண்டும். ஆனால், புதுவையில் திமுக, காங்கிரஸ் கூட்டணி ஆட்சியிலும், தற்போதும் 239 இடங்கள் மட்டுமே பெறப்பட்டு வருகின்றன.
கடந்த ஆண்டு, துணைநிலை ஆளுநா் 50 சதவீத இடங்களைப் பெற அரசுக்கு உத்தரவிட்டும் பெறப்படவில்லை. எனவே, தற்போது சட்டப்பேரவைக் கூட்டத்தில் தனியாா் மருத்துவக் கல்லூரிகளில் அரசு 50 சதவீத இடங்களைப் பெற உரிய சட்டத்தை இயற்ற வேண்டும் என்றாா் அவா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...