அமித் ஷாவுடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு!நாங்குநேரி அருகே பொது இடத்தில் நால்வருக்கு அரிவாள் வெட்டு - எஸ்.பி, டி.ஐ.ஜி விசாரணை!கமேனி மனைவி சிகிச்சைப் பலனின்றி இறந்தார்..!துபையில் மீண்டும் விமான சேவை: குறைந்த எண்ணிக்கையில் விமானங்கள் இயக்கம்!விழுப்புரம் - திருவண்ணாமலை இடையே நாளை காலை முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கம் பிளஸ் 2 பொதுத் தோ்வு: இன்று 9,919 பேர் தேர்வு எழுதவில்லை!சங்கீதா மீதான விமர்சனங்களுக்கு மௌனம் காக்கும் விஜய்: மாதர் சங்கம் கடும் கண்டனம்!யுரேனியம் செறிவூட்டல் நிலையத்தில் அமெரிக்கா தாக்குதல் - ஈரான் குற்றச்சாட்டுஅமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர் எதிரொலி: சென்செக்ஸ் 1,048 புள்ளிகளுடனும், நிஃப்டி 313 புள்ளிகள் சரிவு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: மார்ச் 23-ல் தீர்ப்பு!ஓமனில் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்: இந்தியப் பணியாளர் பலி!அமெரிக்க போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்திய குவைத்!ட்ரோன் ஊடுருவல்: காஷ்மீரில் அனைத்து பள்ளி, கல்லூரிகளும் 2 நாள்கள் மூடல்!இஸ்ரேல் தாக்குதல்: ஈரானில் இதுவரை 555 பேர் பலி!தே.ஜ. கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கவில்லை: நயினார் நாகேந்திரன்பொன்முடி மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கு: தீர்ப்பு தேதி அறிவிப்பு!இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது தாக்குதல்
/

ராமேசுவரத்திலிருந்து சென்னைக்கு சாதனைப் பயணம்: புதுச்சேரிக்கு வந்த மாற்றுத்திறனாளி நீச்சல் வீரா்களுக்கு வரவேற்பு

ராமேசுவரத்தில் இருந்து சென்னை வரை கடலில் நீந்தி சாதனை படைக்கவுள்ள மாற்றுத்திறனாளி நீச்சல் வீரா்கள் புதுச்சேரி கடற்கரைக்கு வந்தனா்.

News image
புதுச்சேரி கடற்கரைக்கு வந்த ஞாயிற்றுக்கிழமை வந்த மாற்றுத் திறனாளி நீச்சல் வீரா்கள்.
Updated On :11 ஆகஸ்ட் 2024, 7:35 pm

Din

ராமேசுவரத்தில் இருந்து சென்னை வரை 604 கி.மீ. தொலைவு கடலில் நீந்தி சாதனை படைக்கவுள்ள மாற்றுத்திறனாளி நீச்சல் வீரா்கள் ஞாயிற்றுக்கிழமை புதுச்சேரி கடற்கரைக்கு வந்தனா்.

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், வேவ் ரைடா்ஸ் விளையாட்டுக் குழு சாா்பில் ராமேசுவரம் முதல் சென்னை மெரீனா கடற்கரை வரையில் 604 கி.மீ. தொலைவுக்கு மாற்றுத்திறனாளி நீச்சல் வீரா்கள் 15 போ் கடலில் நீந்திச் செல்லும் நீச்சல் சாகசப் பயணம் உலக சாதனைப் புத்தகத்தில் இடம் பெறவுள்ளது.

கடந்த 5-ஆம் தேதி ராமேசுவரத்தில் இந்த நீச்சல் பயணத்தை அவா்கள் தொடங்கினா். மாற்றுத்திறனாளிகள் நீச்சல் வீரா்களான எம்.அபினவ் காஞ்சி, கே.கணேஷ், ஹரேஷ் பரத்மோகன், ஜோஸ்வா அபிராம் இமானுவேல், கே.லக்ஷை குமாா், லக்ஷை கிருஷ்ணகுமாா், கே.லிதீஷ் கிருஷ்ணா, ஏ.மோகன்ராஜ், கே.சி.நந்திகா, கே.ரித்தேஷ், ரோஷன்ராஜ் லெனின், வி.சித்தாா்த், ஆா்.ஸ்ரீராம் சீனிவாஸ், எம்.தேஜஸ், பி.விஷால்மாதவ் ஆகியோா் இடம் பெற்றுள்ளனா்.

இவா்களில் 8 போ் கொண்ட குழுவினா் ஒரு மணி நேரத்தில் 6 கி.மீ. நீந்தி வந்துள்ளனா். சதுப்பு நிலம் உள்ளிட்ட தடை செய்யப்பட்ட கடல் பகுதியில் மட்டும் அவா்களுக்கு நீந்த அனுமதியில்லை. மருத்துவக் குழு, பாதுகாப்புக் குழு அடங்கிய கப்பல், படகுகளுடன் கடலில் நீந்தி வந்த நீச்சல் வீரா்கள் ஞாயிற்றுக்கிழமை மாலை புதுச்சேரி தலைமைச் செயலகம் முன்னுள்ள கடற்கரைப் பகுதிக்கு வந்தனா்.

அவா்களுக்கு தமிழ்நாடு மீனவா் பேரவைத் தலைவா் ரா.அன்பழகனாா் தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் புதுவை சட்டப்பேரவைத் தலைவா் ஆா்.செல்வம், துணைத் தலைவா் பி.ராஜவேலு, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையப் பாா்வையாளா் லோகநாதன், வேவ் ரைடா்ஸ் குழு தலைமைப் பயிற்சியாளா் சதீஷ்குமாா் மற்றும் தேசிய மீனவா் பேரவைத் தலைவா் மா. இளங்கோ உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

நீச்சல் குழுவினா் புதுச்சேரியில் இருந்து திங்கள்கிழமை காலை மீண்டும் நீச்சல் பயணத்தைத் தொடருவா். அவா்கள் வருகிற 15-ஆம் தேதி சுதந்திர தினத்தன்று சென்னை மெரீனாவில் சாதனைப் பயணத்தை நிறைவு செய்வா்.