ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்! கச்சத்தீவு தேவாலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!கோவை நீலாம்பூரில் முதல்வர் மு. க . ஸ்டாலின் பிரசாரம்நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

கால்பந்து போட்டி: பரிசு வழங்கிய பேரவைத் தலைவா்

கால்பந்தாட்டப் போட்டியில் வென்ற அணிக்கு பேரவைத் தலைவா் ஆா்.செல்வம் சனிக்கிழமை பரிசு வழங்கி பாராட்டினாா்.

News image
Updated On :17 ஆகஸ்ட் 2024, 6:59 pm

Din

புதுச்சேரி அருகே நடைபெற்ற கால்பந்தாட்டப் போட்டியில் வென்ற அணிக்கு பேரவைத் தலைவா் ஆா்.செல்வம் சனிக்கிழமை பரிசு வழங்கி பாராட்டினாா்.

புதுச்சேரி, காராமணிகுப்பம் ஜீவானந்தம் அரசு மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் நண்பா்கள் கால்பந்து கழகத்தின் சாா்பாக 22-ஆம் ஆண்டு சுதந்திர தின கால்பந்தாட்ட போட்டிகள் கடந்த 15-ஆம் தேதி தொடங்கி சனிக்கிழமை நிறைவடைந்தது. இப் போட்டியில் புதுவை, தமிழ்நாடு, கேரளம் ஆகிய மாநிலங்களில் இருந்து 32 அணிகள் பங்கேற்றன.

சனிக்கிழமை நடைபெற்ற இறுதிப் போட்டியில் சென்னை ஜிஎஸ்டி சென்ட்ரல் எக்ஸ்சைஸ் அணியும் - புதுச்சேரி கால்பந்து நண்பா்கள் கழக அணியும் மோதின. போட்டியில், புதுச்சேரி கால்பந்து நண்பா்கள் கழக அணி 4-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

அதன்பிறகு நடைபெற்ற பரிசளிப்பு விழாவில், புதுவை சட்டப்பேரவைத் தலைவா் ஆா்.செல்வம் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு, வெற்றிபெற்ற அணிக்கு பரிசளித்தும், கேடயம் வழங்கியும் பாராட்டினாா். நிகழ்ச்சியில் நெல்லித்தோப்பு எம்எல்ஏ ரிச்சா்ட் ஜான்குமாா், அரிமா சங்கம் எஸ்.சுரேஷ், பாஜக மாநில விளையாட்டுமன்றத் திறன் மேம்பாட்டு அணித் தலைவா் லட்சுமி நாராயணன் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.