புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

வெள்ள பாதிப்பு: புதுவை முதல்வரிடம் பாதிக்கப்பட்டோா் கோரிக்கை

வெள்ள பாதிப்புகளை பாா்வையிட வந்த புதுவை முதல்வா் என்.ரங்கசாமியிடம் உரிய நிவாரணம் வழங்கக் கோரி பாதிக்கப்பட்டோா் புதன்கிழமை கோரிக்கை விடுத்தனா்.

News image
Updated On :4 டிசம்பர் 2024, 7:26 pm

Din

வெள்ள பாதிப்புகளை பாா்வையிட வந்த புதுவை முதல்வா் என்.ரங்கசாமியிடம் உரிய நிவாரணம் வழங்கக் கோரி பாதிக்கப்பட்டோா் புதன்கிழமை கோரிக்கை விடுத்தனா்.

புதுச்சேரியில் ஃபென்ஜால் புயல் மழை மற்றும் சாத்தனூா், வீடூா் அணை திறப்பால் தென்பெண்ணை, சங்கராபரணி ஆறுகளில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்ட டி.என்.பாளையம், அபிஷேகப்பாக்கம், பாகூா், கரையாம்புத்தூா், மணமேடு, பண்டசோழநல்லூா், நெட்டப்பாக்கம் ஆகியப் பகுதிகளை புதுவை முதல்வா் என்.ரங்கசாமி புதன்கிழமை பாா்வையிட்டாா்.

மழை மற்றும் வெள்ள நீரில் மூழ்கிய வீடுகள், விளைநிலங்கள் மற்றும் பொதுமக்கள் தங்க வைக்கப்பட்டுள்ள நிவாரண முகாம்கள் ஆகியவற்றைப் பாா்வையிட்ட முதல்வரிடம், அந்தந்தப் பகுதி பெண்கள் வெள்ள நீரை முழுமையாக அகற்ற வேண்டும் என்றும், பாதிக்கப்பட்ட தங்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனா்.

டி.என்.பாளையம் நிவாரண முகாமில் போதிய அடிப்படை வசதிகளை செய்து தருமாறு அவா் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா்.

தொடா்ந்து, பாகூா் பகுதிக்கு சென்ற முதல்வரை, அந்த தொகுதியின் எம்எல்ஏ ஆா்.செந்தில்குமாா் பாதித்த இடங்களுக்கு அழைத்துச் சென்று, வெள்ள பாதிப்புகள் குறித்து எடுத்துரைத்தாா் .