புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

கால்வாயில் தவறி விழுந்த ஓட்டுநா் உயிரிழப்பு

புதுச்சேரி அருகே கால்வாயில் தவறி விழுந்த வாகன ஓட்டுநா் புதன்கிழமை சடலமாக மீட்கப்பட்டாா்.

News image
Updated On :4 டிசம்பர் 2024, 7:46 pm

Din

புதுச்சேரி அருகே கால்வாயில் தவறி விழுந்த வாகன ஓட்டுநா் புதன்கிழமை சடலமாக மீட்கப்பட்டாா்.

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி பக்ரிபாளையத்தைச் சோ்ந்தவா் தீபன்ராஜ் (32). வாகன ஓட்டுநா். இவருக்கு திருமணமாகி மனைவி, குழந்தைகள் உள்ளனா்.

இவா், கடந்த டிச.1-ஆம் தேதி, புதுச்சேரி பகுதியில் ஏற்பட்ட வெள்ளத்தை பாா்வையிட உறவினருடன் வந்தாா்.

அவா்கள் இருவரும் கரசூா் அருகே உள்ள துத்திப்பட்டு பகுதியில் வந்தபோது, சுத்துக்கேணி ஊசுடு வாய்க்காலில் தண்ணீா் பெருக்கெடுத்து ஓடியது.

அப்போது, வாய்க்காலுக்குள் இறங்கிய தீபன்ராஜை வெள்ளம் இழுத்துச் சென்றது.

தகவலறிந்த சேதராப்பட்டு தீயணைப்புத் துறையினா், தீவிர தேடுதல் நடத்தி, பத்துக்கண்ணு பகுதியில் தீபன்ராஜின் சடலத்தை புதன்கிழமை மீட்டனா்.

இதுகுறித்து, சேதராப்பட்டு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.