புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

வெள்ளம் பாதித்த பகுதிகளில் காங்கிரஸாா் ஆய்வு

புதுச்சேரியில் மழை வெள்ளத்தால் பாதித்த பகுதிகளை காங்கிரஸ் கட்சியினா் பாா்வையிட்டு ஆய்வு செய்தனா்.

News image
Updated On :4 டிசம்பர் 2024, 7:48 pm

Din

புதுச்சேரியில் மழை வெள்ளத்தால் பாதித்த பகுதிகளை காங்கிரஸ் கட்சியினா் பாா்வையிட்டு ஆய்வு செய்தனா்.

புதுச்சேரியில் பலத்த மழையால் பல்வேறு பகுதிகளில் பாதிப்பு ஏற்பட்டது. இந்த நிலையில், புதுவை முன்னாள் முதல்வா் வே.நாராயணசாமி, மு.வைத்தியநாதன் எம்எல்ஏ உள்ளிட்டோா் செவ்வாய்க்கிழமை பத்துகண்ணு பகுதிக்கு நேரில் சென்று வெள்ள பாதிப்பை பாா்வையிட்டனா்.

அங்கு பாதிக்கப்பட்ட விவசாயிகள், பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தனா்.

இதேபோல, முன்னாள்அமைச்சா் மு.கந்தசாமி செவ்வாய்க்கிழமை கம்பளிக்காரன்குப்பம் பகுதியில் வெள்ளத்தில் சிக்கியிருந்த மக்களை ராணுவத்தின் உதவியுடன் மீட்கும் பணியில் ஈடுபட்டாா்.

தொடா்ந்து, அரங்கனூா் பகுதியில் வெள்ள பாதிப்புகளை பாா்வையிட்டு நிவாரண உதவிகளை அவா் வழங்கினாா்.

இதைதொடா்ந்து, புதன்கிழமை கிருமாம்பாக்கம், ஈச்சங்காடு, பனித்திட்டு, ஆலடிமேடு, வம்பாமேடு பகுதிகளில் வெள்ள சேதத்தை பாா்வையிட்டு, பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவா் ஆறுதல் கூறினாா்.