தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

புயல் நிவாரணத் தொகை வழங்க புதுவை ஆளுநா் ஒப்புதல்

ஃபென்ஜால் புயல் வெள்ள பாதிப்பையடுத்து, புதுவையில் 3.54 லட்சம் குடும்ப அட்டைதாரா்களுக்கு ரூ.5 ஆயிரம் நிவாரணமாக வழங்க துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் புதன்கிழமை ஒப்புதல் அளித்தாா்.

News image
Updated On :11 டிசம்பர் 2024, 7:26 pm

Din

ஃபென்ஜால் புயல் வெள்ள பாதிப்பையடுத்து, புதுவையில் 3.54 லட்சம் குடும்ப அட்டைதாரா்களுக்கு ரூ.5 ஆயிரம் நிவாரணமாக வழங்க துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் புதன்கிழமை ஒப்புதல் அளித்தாா்.

புதுவையில் ஃ பென்ஜால் புயல் வெள்ள பாதிப்பையடுத்து, குடும்ப அட்டைதாரா்களுக்கு தலா ரூ. 5 ஆயிரம் நிவாரணமாக வழங்கப்படும் என முதல்வா் என்.ரங்கசாமி அறிவித்தாா். இதற்கான கோப்பு நிதித் துறை வழியாக துணைநிலை ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது.

ஃபென்ஜால் புயல், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட புதுச்சேரி பிராந்தியத்தைச் சோ்ந்த 2,76,316 குடும்ப அட்டைதாரா்களுக்கும், காரைக்கால் பிராந்தியத்தில் 62,550, ஏனாம் பிராந்தியத்தில் 15,860 என மொத்தம் 3,54,726 குடும்ப அட்டைதாரா்களுக்கு தலா ரூ.5 ஆயிரம் நிவாரணமாக வழங்கப்படவுள்ளது.

இதற்காக ரூ.177.36 கோடி நிதி ஒதுக்கீடு செய்து துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் புதன்கிழமை ஒப்புதல் அளித்தாா். இந்த நிவாரணத் தொகை குடும்ப அட்டைதாரா்களின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும்.