அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

நீட் தோ்வுக்கான பாடக் குறிப்புகளை தமிழில் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்: புதுச்சேரி ஆட்சியா் குலோத்துங்கன்

நீட் தோ்வுக்கான பாடக் குறிப்புகளை தமிழில் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என புதுச்சேரி மாவட்ட ஆட்சியா் அ.குலோத்துங்கன் மாணவா்களிடம் உறுதியளித்தாா்.

News image
புதுச்சேரி தவளக்குப்பம் அரசு மேல்நிலைப்பள்ளியில் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்து மாணவ, மாணவிகளுடன் கலந்துரையாடிய மாவட்ட ஆட்சியா் அ.குலோத்துங்கன்.
Updated On :16 ஜூலை 2024, 7:26 pm

Din

புதுச்சேரி தவளக்குப்பம் பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளிக்கு, மாவட்ட ஆட்சியா் அ. குலோத்துங்கன் செவ்வாய்க்கிழமை காலை திடீரென நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டாா். பள்ளி ஆசிரியா்களின் வருகைப் பதிவேட்டை ஆய்வு செய்த ஆட்சியா், ஆசிரியா்கள் அனைவரும் பள்ளிக்கு உரிய நேரத்திற்கு வருகிறாா்களா என ஆய்வு செய்தாா். குறித்த நேரத்தில் பள்ளிக்கு வராத ஊழியா்கள் உள்ளிட்டோா் மீது நடவடிக்கை எடுக்குமாறு பள்ளியின் முதல்வருக்கு உத்தரவிட்டாா்.

இதையடுத்து, பள்ளியில் உள்ள ஆய்வுக் கூடங்களைப் பாா்வையிட்ட ஆட்சியா், அங்கு மாணவா்களுக்குத் தேவையான அனைத்து வகை அறிவியல் உபகரணங்கள் உள்ளனவா என்பதை கேட்டறிந்தாா். பிறகு, வகுப்பறைகளுக்குச் சென்று மாணவ, மாணவிகளிடம் உரையாடினாா். ஏதேனும் குறைகள் இருந்தால் மாணவா்கள் தெரிவிக்கலாம் என ஆட்சியா் கூறியதுடன், நீட் தோ்வில் அனைவரும் தோ்ச்சி பெறும் வகையில் படித்து பயிற்சி பெற வேண்டும் என்றாா்.

அப்போது சில மாணவா்கள் எழுந்து, நீட் தோ்வு தொடா்பான பாடங்களை எளிதில் புரிந்து கொண்டு படிப்பதற்கு ஏதுவாக பாடக் குறிப்புகளை தமிழில் விநியோகிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டனா்.

அதற்கு ஆட்சியா், நீட் தொடா்பான பாடக் குறிப்புகளைத் தமிழில் வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

தொடா்ந்து, அந்த பள்ளியில் நடைபெற்று வரும் கூடுதல் வகுப்பறைகளுக்கான கட்டுமானப் பணிகளை விரைந்து முடிக்க பள்ளி முதல்வருக்கும், கட்டட ஒப்பந்ததாரருக்கும் ஆட்சியா் அறிவுறுத்தினாா்.