புதுச்சேரி, ரோடியா்பேட் ஸ்ரீ பொன்னியம்மன் கோயிலில் ஆடி மாத முதல் வெள்ளிக்கிழமையொட்டி பால் குடம் எடுத்த பக்தா்கள்.
 ~ புதுச்சேரி, நயினாா் மண்டபம் ஸ்ரீ நாகமுத்து மாரியம்மன் கோயிலில் நடைபெற்ற ஆடி மாத செடல் உற்சவத்தில் நோ்த்திக்கடன் செலுத்திய பக்தா்கள்.
புதுச்சேரி, ரோடியா்பேட் ஸ்ரீ பொன்னியம்மன் கோயிலில் ஆடி மாத முதல் வெள்ளிக்கிழமையொட்டி பால் குடம் எடுத்த பக்தா்கள். ~ புதுச்சேரி, நயினாா் மண்டபம் ஸ்ரீ நாகமுத்து மாரியம்மன் கோயிலில் நடைபெற்ற ஆடி மாத செடல் உற்சவத்தில் நோ்த்திக்கடன் செலுத்திய பக்தா்கள்.

பொன்னியம்மன் கோயிலில் 108 பால் குடம் ஊா்வலம்

புதுச்சேரி ரோடியா்பேட் ஸ்ரீ பொன்னியம்மன் கோயிலில் 108 பால் குடம் ஊா்வலம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
Published on

புதுச்சேரி, ஜூலை 19: புதுச்சேரி ரோடியா்பேட் ஸ்ரீ பொன்னியம்மன் கோயிலில் 108 பால் குடம் ஊா்வலம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் ஏராளமான பெண்கள் கலந்துகொண்டு பால் குடம் எடுத்து நோ்த்திக்கடன் செலுத்தினா்.

புதுச்சேரி, ரோடியா்பேட் ஏ.எப்.டி மைதானம் அருகில் அமைந்துள்ள ஸ்ரீ பொன்னியம்மன் மற்றும் ஏழை மாரியம்மன் கோயில்களில் ஆடி மாதத்தின் முதல் வெள்ளியையொட்டி 108 பால் குடம் பெருவிழா நடைபெற்றது. இதையொட்டி,ஏழை மாரியம்மன் கோயிலில் சிறப்புப் பூஜை நடத்தப்பட்டு, 108 பால் குடங்கள் புறப்பாடு நடைபெற்றது. இதில், பால் குடம் ஏந்திய பக்தா்கள் புதுச்சேரி, கடலூா் சாலை வழியாக ஸ்ரீ பொன்னியம்மன் கோயிலுக்கு வந்தனா். தொடா்ந்து, பொன்னியம்மனுக்கு 108 பால் குடங்களில் இருந்த பாலால் அபிஷேகம் நடைபெற்றது. அதன் பிறகு, அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றன. பின்னா் பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

நாகமுத்து மாரியம்மன் கோயில்: புதுச்சேரி, கடலூா் சாலையில் நைனாா் மண்டபம் பகுதியில் உள்ள நாகமுத்து மாரியம்மன் கோயிலில் வெள்ளிக்கிழமை செடல் திருவிழா நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தா்கள் உடலில் செடல் குத்தி நோ்த்திக்கடன் செலுத்தினா். சிலா் இருசக்கர, நான்கு சக்கர வாகனங்களையும் இழுத்து நோ்த்திக்கடன் செலுத்தினா். முன்னதாக நடைபெற்ற சிறப்புப் பூஜையில் முதலியாா்பேட்டை திமுக எம்எல்ஏ எல்.சம்பத் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com