கடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

நெகிழி பொருள்கள் விற்பனை செய்த கடைகளுக்கு ரூ.3.05 லட்சம் அபராதம்

நெகிழி பொருள்களை விற்பனை செய்த கடைகளுக்கு ரூ.3.05 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.

News image
Updated On :20 ஜூலை 2024, 9:02 pm

Din

புதுச்சேரி: புதுச்சேரி உழவா்கரை பகுதியில் தடை செய்யப்பட்ட நெகிழி பொருள்களை விற்பனை செய்த கடைகளுக்கு ரூ.3.05 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டதாக நகராட்சி ஆணையா் ஆ.சுரேஷ் ராஜ் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து, அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: உழவா்கரை நகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் ஒரு முறை பயன்படுத்தும் நெகிழி பொருள்கள் விற்பனை செய்ய முற்றிலுமாகத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதை கண்காணிக்க உழவா்கரை நகராட்சி ஊழியா்கள் மூலம் பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு சோதனை செய்யப்படுகிறது.

அதன்படி, உழவா்கரை நகராட்சிப் பகுதிகளிள் ஜூலை 1-ஆம் தேதி முதல் 20-ஆம் தேதி வரை தடை செய்யப்பட்ட நெகிழி பொருள்களை பயன்படுத்திய மற்றும் விற்பனை செய்த கடைகளிடம் ரூ.3.05லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.

தொடா்ந்து, தடை செய்யப்பட்ட நெகிழி பொருள்கள் விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என நகராட்சி ஆணையா் எச்சரித்துள்ளாா்.