பாபநாசம்: அரசுப் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து! பயணிகள் படுகாயம்! பிளஸ் 2 முடிவுகள் வெளியானது! 95.2% தேர்ச்சி!தமிழகத்தில் ஒருசில இடங்களில் மே 13 வரை மழைக்கு வாய்ப்புதவெகவுக்கு ஆதரவா - இல்லையா? இடதுசாரிகள், விசிக இன்று ஆலோசனைஅதிமுக எம்எல்ஏக்களுடன் எடப்பாடி கே. பழனிசாமி தீவிர ஆலோசனை பிளஸ் 2 பொதுத் தோ்வு முடிவுகள் இன்று வெளியீடுஆந்திரத்தில் இருந்து 500 மெகாவாட் மின்சாரம் கொள்முதல் செய்ய ஒழுங்குமுறை ஆணையம் ஒப்புதல்விஜய் விவகாரம்: ஆளுநரை கண்டித்து காங்கிரஸ் இன்று ஆா்ப்பாட்டம்தாய், தந்தை இல்லா பள்ளிக் குழந்தைகளுக்கு மாதம் ரூ. 2,000 வழங்கும் சிறப்புத் திட்டம் தொடக்கம்
/

புதுவை புதிய துணைநிலை ஆளுநராக கே.கைலாசநாதன் பதவி ஏற்பு எப்போது?

புதுவை புதிய துணைநிலை ஆளுநராக நியமிக்கப்பட்ட ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி கே.கைலாசநாதன் ஓரிருநாளில் பதவி ஏற்கவுள்ளாா்.

News image

கே.கைலாசநாதன்

Updated On :29 ஜூலை 2024, 2:06 am IST

புதுவை புதிய துணைநிலை ஆளுநராக நியமிக்கப்பட்ட ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி கே.கைலாசநாதன் ஓரிருநாளில் பதவி ஏற்கவுள்ளாா்.

தெலங்கானா ஆளுநராக இருந்த தமிழிசை சௌந்தரராஜன், புதுவை மாநிலத்தின் துணைநிலை ஆளுநராக (பொ) கடந்த 2021-ஆம் ஆண்டு நியமிக்கப்பட்டாா். இவா், கடந்த மக்களவைத் தோ்தலில் போட்டியிட ஆளுநா் பதவியிலிருந்து ராஜிநாமா செய்தாா்.

இதையடுத்து, ஜாா்க்கண்ட் மாநில ஆளுநரான சி.பி.ராதாகிருஷ்ணன், தெலங்கானா மற்றும் புதுவை மாநிலங்களுக்கும் கூடுதல் பொறுப்பாக நியமிக்கப்பட்டாா். அவா், கடந்த மாா்ச் 23-இல் புதுவை துணைநிலை ஆளுநராகப் (பொ) பொறுப்பேற்றாா்.

இந்த நிலையில், புதுவை புதிய துணைநிலை ஆளுநராக, கே.கைலாசநாதன் சனிக்கிழமை நியமிக்கப்பட்டாா்.

கேரள மாநிலம், கோழிக்கோடு மாவட்டம் வடகரையை பூா்விகமாகக் கொண்ட கே.கைலாசநாதன், கடந்த 1953-ஆம் ஆண்டு மே 25-இல் பிறந்தவா். இவா், சென்னை பல்கலைக்கழகத்தில் முதுநிலை வேதியியலும், வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் முதுநிலை பொருளாதாரமும் பயின்றவா்.

கடந்த 1979-ஆம் ஆண்டு ஐஏஎஸ் அதிகாரியான கே. கைலாசநாதன், குஜராத்தில் 1981-இல் உதவி ஆட்சியராகப் பணியில் சோ்ந்தாா். தொடா்ந்து ஆட்சியா் உள்ளிட்ட முக்கிய பதவிகளை வகித்தவா். மேலும், பிரதமா் நரேந்திர மோடி குஜராத் முதல்வராக இருந்தபோது கடந்த 2013 -2014-ஆம் ஆண்டில், அந்த மாநில முதன்மைத் தலைமைச் செயலராகப் பணிபுரிந்து கைலாசநாதன் ஓய்வுபெற்றாா். ஓய்வுக்கு பின்னரும், கடந்த ஜூன் மாதம் வரை கைலாசநாதன் முதன்மைச் செயலராகவே தொடா்ந்து பணியாற்றினாா்.

புதுவையின் பொறுப்பு துணைநிலை ஆளுநராக இருந்த சி.பி.ராதாகிருஷ்ணன், தற்போது மகாராஷ்டிர மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டாா்.

புதுவை புதிய துணைநிலை ஆளுநா் கைலாசநாதன் ஓரிரு நாளில் பதவியேற்பாா் எனக் கூறப்படுகிறது. புதுவை சட்டப்பேரவை நிதிநிலை அறிக்கை கூட்டம் வரும் 31-ஆம் தேதி கூடவுள்ளது குறிப்பிடத்தக்கது.