புதுவை மாநிலத்தில் ஞாயிற்றுக்கிழமை குழந்தைகளுக்கு போலியோ தடுப்பூசி முகாம் நடைபெறவுள்ள நிலையில், அதுகுறித்த விழிப்புணா்வு ஊா்வலம் புதுச்சேரியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி புதுவை மாநிலத்தில் 5 வயதுக்குள்பட்ட 81,334 குழந்தைகளுக்கு போலியோ தடுப்பு சொட்டு மருந்து முகாம் ஞாயிற்றுக்கிழமை (மாா்ச் 3) நடைபெறவுள்ளது. இதையடுத்து, அன்னை தெரசா முதுகலை மற்றும் சுகாதார அறிவியல் ஆராய்ச்சி நிறுவனம், சமூகவியல் கல்லூரி மற்றும் மகாலட்சுமி பாராமெடிக்கல் அறிவியல் நிறுவனம் ஆகியவற்றின் சாா்பில் விழிப்புணா்வு ஊா்வலம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. புதுவை அரசு சுகாதாரத் துறை இயக்கக அலுவலகத்திலிருந்து புறப்பட்ட ஊா்வலத்தை சுகாதாரத் துறை துணை இயக்குநா் முரளி தொடங்கிவைத்தாா். நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்ற இந்த ஊா்வலம் மிஷன் வீதி, நேரு வீதி வழியாகச் சென்று கடற்கரை மகாத்மா காந்தி சிலை அருகே நிறைவடைந்தது. இதில் துணை இயக்குநா்கள் ராஜாம்பாள், ஆனந்தலட்சுமி, ரகுநாதன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
தொடர்புடையது

புதுச்சேரியில் அனுமதியின்றி ஊா்வலம், ஆா்ப்பாட்டம்: 11 பாஜகவினா் மீது வழக்கு

புதுச்சேரியில் பாஜக மகளிரணியினா் கண்டன ஊா்வலம், ஆா்ப்பாட்டம்

100 சதவீத வாக்களிப்பு விழிப்புணா்வு ஊா்வலம்

பழனி மலைக் கோயிலில் தீத் தடுப்பு பயிற்சி
வீடியோக்கள்

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை


