மெய்யான சமூக நீதி, நிலையான வளர்ச்சி, வேளாண்மை எழுச்சியே நம் இலக்கு: அண்ணாமலைதவெக அரசு இந்த ஆண்டு ரூ. 85 ஆயிரம் கோடி கடன் வாங்கப்போகிறது : அண்ணாமலைவீ தி லீடர்ஸ் அமைப்பின் இலக்கை 50% எட்டிவிட்டோம்: அண்ணாமலை2026 போல 2031-ல் ஆட்சி மாற்றம் நடக்கும்: அண்ணாமலை உறுதிஎதிர்க்கட்சி தூண்டுதலால் டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டம்! அமைச்சர் விக்னேஷ்பாடகி ஜானகியின் மறைவு வருத்தமளிக்கிறது: ராகுல் காந்தி
/

புதுவை மக்களவைத் தொகுதி பாஜகவிற்கு ஒதுக்கீடு: முதல்வர் ரங்கசாமி

புதுவை மக்களவைத் தொகுதி பாஜகவிற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக முதல்வர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.

News image

புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி (கோப்புப்படம்)

Updated On :3 மார்ச் 2024, 10:47 am IST

புதுவை மாநிலத்தில் 5 வயதுக்குள்பட்ட 81,334 குழந்தைகளுக்கு போலியோ தடுப்பு சொட்டு மருந்து முகாம் இன்று (மாா்ச் 3) நடைபெற்று வருகிறது.

இதில் புதுவையில் 63 ஆயிரத்து 853 குழந்தைகள், காரைக்காலில் 12 ஆயிரத்து 257 குழந்தைகள், மாகியில் 1685 குழந்தைகளும், ஏனாமில் 3539 குழந்தைகளுக்கும் போலியோ சொட்டு மருந்து நடைபெறுகிறது.

இந்நிலையில் புதுவை கதிர்காமத்தில் உள்ள அரசுப் பள்ளியில் முதலமைச்சர் ரங்கசாமி கலந்து கொண்டு குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து முகாமை துவக்கி வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் ரங்கசாமி, "புதுவை மக்களவைத் தொகுதி பாஜகவிற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பாஜக வேட்பாளர் யார் என்பது குறித்து கட்சித் தலைமை அறிவிக்கும்" என்று தெரிவித்தார்.

கடந்த மக்களவைத் தேர்தலில் காங்கிரஸுக்கு புதுவை மக்களவைத் தொகுதி ஓதுக்கீடு செய்யப்பட்ட நிலையில், இம்முறையும் காங்கிரஸுக்கு ஒதுக்கவுள்ளதாக தகவல் வெளியானது.

இதனால், இம்முறை புதுவை மாநிலத்தில் பாஜக - காங்கிரஸ் இடையே நேரடிப் போட்டி நிலவும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.