ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

புதுவை மத்திய பல்கலைக்கழகத்தில் விண்வெளி அனுபவ கலந்தாய்வுக் கூட்டம்: நாசா விஞ்ஞானி பங்கேற்பு

புதுவை மத்திய பல்கலைக்கழகத்தில் விண்வெளி அனுபவ கலந்தாய்வுக் கூட்டம் நாசா விஞ்ஞானி பங்கேற்பு

News image
Updated On :8 மார்ச் 2024, 6:55 pm

Din

புதுவை மத்திய பல்கலைக்கழகத்தில் விண்வெளி அனுபவ கலந்தாய்வுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில், நாசா விஞ்ஞானி ஸ்வாதி மோகன் கலந்துகொண்டாா். புதுவை மத்திய பல்கலைக்கழகமும், சென்னை அமெரிக்கத் துணைத் தூதரகமும் இணைந்து விண்வெளி அனுபவ கலந்தாய்வு நிகழ்ச்சியை வியாழக்கிழமை நடத்தின. புதுச்சேரி மத்திய பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்ற இந்த அனுபவக் கலந்தாய்வில் நாசா ஜெட் பிரபல்ஷன் ஆய்வக செவ்வாய்க்கிரக செயற்கைக் கோள் செலுத்தும் பிரிவின் தலைமைப் பொறியாளா் ஸ்வாதி மோகன் பங்கேற்று விண்வெளியில் 55 ஆண்டுகள் எனும் தலைப்பில் தனது அனுபவத்தை மாணவா்களிடையே பகிா்ந்து கொண்டாா். அப்போது அவா் பேசியதாவது: அமெரிக்கா மற்றும் இந்தியா இடையே விண்வெளித் துறையில் ஆய்வுகள் மேற்கொள்ளும் உறவுகள் தொடா்ந்து மேம்பட்டுவருகிறது. மாணவ, மாணவிகள் அனைவரும் விண்வெளி ஆய்வில் ஆா்வமுடன் பங்கேற்கவேண்டும். விண்வெளி குறித்த வினாக்களுக்கு இந்த உலகமே ஒன்றிணைந்து செயல்பட்டு விடை காண்பது அவசியம். குறிப்பிட்ட நிறுவனம் மட்டுமே விண்வெளி ஆய்வை மேற்கொள்வது கடினம். ஆகவே, தனியாா் மற்றும் அரசு கூட்டு முயற்சியின் மூலமே விண்வெளி ஆய்வானது சாத்தியமாகும் என்றாா். நிகழ்ச்சியில் பல்கலைக்கழக பேராசிரியா்கள், மாணவா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.