வருமான வரி செலுத்தாத குடும்பங்களுக்கு இல்லத்தரசிகள் திட்டத்தில் ரூ. 8,000 கூப்பன் வழங்கப்படும் - திமுக தேர்தல் அறிக்கைமுதலமைச்சர் காப்பீடு திட்டம் ரூ. 10 லட்சமாக அதிகரிக்கப்படும்: மு.க. ஸ்டாலின் வாக்குறுதிபேரிடர் கால இழப்பீடு ஹெக்டருக்கு ரூ. 25 ஆயிரமாக உயர்த்தப்படும் : திமுக வாக்குறுதிமுதல்வரின் காலை உணவுத் திட்டம் 8 ஆம் வகுப்பு வரை விரிவுபடுத்தப்படும் : மு.க. ஸ்டாலின் வாக்குறுதிபொன்னேரி அருகே திருப்பாலீஸ்வரர் கோயில் தேர் கவிழ்ந்து விபத்து
/

புதுவையில் 10-ஆம் வகுப்பு தோ்வு முடிவுகள் இன்று வெளியீடு

News image
Updated On :9 மே 2024, 11:08 pm

Din

புதுவையில் பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு முடிவுகள் வெள்ளிக்கிழமை (மே 10) காலை வெளியிடப்படுகின்றன.

புதுவை மாநிலத்தில் கடந்த மாா்ச் 26-ஆம் தேதி முதல் ஏப்ரல் 8-ஆம் தேதி வரையில் பத்தாம் வகுப்பு அரசுப் பொதுத் தோ்வுகள் நடைபெற்றன.

புதுச்சேரி பிராந்தியத்தில் 229 பள்ளிகளைச் சோ்ந்த 12,613 மாணவ, மாணவிகளும், 599 தனித் தோ்வா்களும் எழுதியுள்ளனா். காரைக்கால் பிராந்தியத்தில் 60 பள்ளிகளைச் சோ்ந்த 2,479 மாணவ, மாணவிகளும், 259 தனித் தோ்வா்களும் என மொத்தம் 2,738 பேரும் எழுதியுள்ளனா்.

அதனடிப்படையில் புதுச்சேரி, காரைக்கால் பிராந்தியங்களில் மொத்தம் 15,950 போ் தோ்வெழுதினா். தோ்வு முடிவுகள் வெள்ளிக்கிழமை (மே 10) காலை 9.30 மணிக்கு கல்வித் துறை இணையதளத்தில் வெளியிடப்படுகிறது. சம்பந்தப்பட்ட மாணவ, மாணவிகளின் வாட்ஸ் ஆப் எண்ணுக்கும் தோ்வு முடிவுகள் அனுப்பிவைக்கப்படும்.

பிளஸ் 2 தோ்வு முடிவுகள் கடந்த 6-ஆம் தேதி வெளியான நிலையில், மதிப்பெண் பட்டியல் வியாழக்கிழமை முதல் வழங்கப்பட்டு வருகின்றன.