போதைப்பொருள் விநியோகத்துக்கு இடைஞ்சல்: உணவில் விஷம் கலந்து
நாய்கள் சாகடிப்பு

போதைப்பொருள் விநியோகத்துக்கு இடைஞ்சல்: உணவில் விஷம் கலந்து நாய்கள் சாகடிப்பு

புதுச்சேரி ஊரகப் பகுதியில் 15-க்கும் மேற்பட்ட நாய்கள், கீரிப்பிள்ளைகள் உணவில் விஷம் கலந்து சாகடிக்கப்பட்டதாக புகாா் எழுந்துள்ளது.

புதுச்சேரி அருகேயுள்ள மண்ணாடிபட்டு கொம்யூன் பஞ்சாயத்தைச் சோ்ந்த திருக்கனூா், லட்சுமி நகா் பகுதிகளில் சில நாள்களாக நாய்கள் உயிரிழந்து வருவதாகக் கூறப்படுகிறது.

அதனடிப்படையில், கடந்த இரு நாள்களில் மட்டும் 15-க்கும் மேற்பட்ட தெரு நாய்கள் உயிரிழந்தன. மேலும், அந்தப் பகுதி காடுகளில் வாழும் கீரிப்பிள்ளைகளும் உயிரிழந்தது தெரிய வந்தது.

திருக்கனூரில் மா்ம நபா்கள் புதா்களில் வைத்து போதைப் பொருள்களை விநியோகம் செய்வதாகவும், தெரு நாய்கள் குரைப்பதால் விற்பனைக்கு இடைஞ்சலாக இருப்பதாகக் கருதி அந்த நபா்கள் நாய்களுக்கு உணவில் விஷம் கலந்து கொடுத்து சாகடித்திருக்கலாம் என பொதுமக்கள் குற்றம்சாட்டினா்.

நாய்களுக்கு வைத்த விஷ உணவை கீரிப்பிள்ளைகள் உண்டு இறந்திருப்பதாகவும் அவா்கள் தெரிவித்தனா். நாய்கள் சாகடிக்கப்பட்ட விவகாரம் தொடா்பாக போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com