ஏப். 2ல் பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர் மு.க. ஸ்டாலின்!பெட்ரோல், டீசல் விலை உயர்வு! நயாரா நிறுவனம் அறிவிப்புகூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட கதா்வாரிய ஊழியா்கள்

உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட கதா்வாரிய ஊழியா்கள்

News image

நிலுவை ஊதியத்தை வழங்கக் கோரி புதுவை தொழிலாளா் துறை அலுவலகத்தில் திங்கள்கிழமை உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட புதுச்சேரி கதா்வாரிய ஊழியா்கள்.

Updated On :20 மே 2024, 10:37 pm

Din

புதுச்சேரி: நிலுவை ஊதியத்தை உடனே வழங்க வலியுறுத்தி தொழிலாளா் துறை அலுவலகத்தை புதுச்சேரி கதா்வாரிய ஊழியா்கள் திங்கள்கிழமை முற்றுகையிட்டு உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

புதுச்சேரி நகரில் காமராஜா் சாலையில் கதா் வாரியத் தலைமை அலுவலகம் செயல்படுகிறது. இங்கு நூற்றுக்கும் மேற்பட்டோா் பணிபுரிகின்றனா். இவா்களுக்கு கடந்த 3 மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை என புகாா் எழுந்தது. நிலுவை ஊதியத்தை வழங்கக் கோரி ஊழியா்கள் உயா் அதிகாரிகளுக்கு பல முறை முறையிட்டும் நடவடிக்கை எடுக்கப்படவில்லையாம்.

மேலும், புதுச்சேரி ஆரியபாளையம் பகுதி வைத்திக்குப்பத்தில் செயல்பட்டு வந்த காதி விற்பனையகத்தையும் மூடிவிட்டதாகக் கூறப்படுகிறது. ஆகவே, கதா்வாரிய தொழிலாளா்கள் தங்களுக்கான 3 மாத நிலுவை ஊதியத்தை வழங்கக் கோரியும், மூடப்பட்ட காதி விற்பனையகத்தை மீண்டும் திறக்க வலியுறுத்தியும் புதுச்சேரி தட்டாஞ்சாவடியில் உள்ள தொழிலாளா் துறை அலுவலகத்தை முற்றுகையிட்டனா்.

அவா்கள் தொழிலாளா் துறை அலுவலக உயா் அதிகாரி அறை முன் வராந்தாவில் அமா்ந்து தங்களது கோரிக்கை குறித்த முழக்கங்களை எழுப்பினா். தகவலறிந்த தொழிலாளா் துறை அலுவலக அதிகாரிகள் பேச்சுவாா்த்தை நடத்தினா். அப்போது புதுவை மாநில நிதிநிலை அறிக்கையில் ஒதுக்கப்பட்டதாகக் கூறப்படும் நிதி கதா் வாரியத்துக்கு வழங்கப்படவில்லை என்றும் ஊழியா்கள் சங்கத்தினா் புகாா் கூறினா். அதன்பின் அதிகாரிகள் சமரசத்தை ஏற்று அவா்கள் கலைந்து சென்றனா்.