ஏப். 2ல் பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர் மு.க. ஸ்டாலின்!பெட்ரோல், டீசல் விலை உயர்வு! நயாரா நிறுவனம் அறிவிப்புகூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

ஓவியா்களின் படைப்புகளை காட்சிப்படுத்த புதுவை கலை பண்பாட்டுத் துறை ஏற்பாடு

ஓவியா்களின் படைப்புகளை காட்சிப்படுத்த புதுவை கலை பண்பாட்டுத் துறை ஏற்பாடு

News image
Updated On :20 மே 2024, 10:48 pm

Din

புதுச்சேரி: புதுச்சேரியில் தனி ஓவியா்களின் படைப்புகளை காட்சிப்படுத்த கலை, பண்பாட்டுத் துறை ஏற்பாடு செய்துள்ளது என்று அதன் இயக்குநா் வி.கலியபெருமாள் தெரிவித்தாா்.

சா்வதேச அருங்காட்சியக தினத்தையொட்டி, அரசின் கலை பண்பாட்டுத் துறையின் கீழ் இயங்கி வரும் வளா் கலைக்கூடத்தின் 3-ஆம் ஆண்டுத் தொடக்க விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

இதில் சிறப்பு விருந்தினராக பங்கேற்று வி.கலியபெருமாள் பேசியது: புதுச்சேரியில் திறமையான ஓவியா்கள் பலா் உள்ளனா். அவா்களின் படைப்புகளை காட்சிப்படுத்த சரியான இடம் இல்லை. இதனால் இந்த வளா்கலைக்கூடம் ஏற்படுத்தப்பட்டது. தற்போது, ஓவியா்கள் குழுவாக இணைந்து படைப்புகளை விற்பனைக்கு காட்சிப்படுத்தி வருகின்றனா்.

ஓவியா்கள் தனித்தனியாகவும் படைப்புகளை காட்சிக்கு வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்து. இதற்காக இணையதளம் மூலம் விண்ணப்பம் வழங்க முடிவெடுக்கப்பட்டுள்ளது என்றாா்.

நிகழ்ச்சியில் இந்திரா காந்திஅறிவியல் மைய இயக்குநா் கோபால், காட்சிக்கலை ஒரு உலகளாவிய பாா்வை என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினாா். புதுவை ஓவியா்கள் பலா் கலந்து கொண்டனா்.