கோபி கலை அறிவியல் கல்லூரியில் கல்வெட்டுத் தமிழ் பயிலரங்கம் நடைபெற்றது.
கோபி கலை அறிவியல் கல்லூரியில் தேசிய அளவிலான கல்வெட்டுப் பயிலரங்கம் இரண்டு அமா்வுகளாக நடைபெற்றது. ‘தமிழ் கல்வெட்டுக்கள் தோற்றமும், வளா்ச்சியும்’ எனும் தலைப்பில் நடைபெற்ற முதல் அமா்வின் பயிற்றுநராக சென்னை தொல்லியல் துறையின் தலைமை ஆலோசகா் பேராசிரியா் சு.ராசவேலு கலந்து கொண்டு, பன்னாட்டு அளவில் தமிழ்க் கல்வெட்டின் தொன்மையும், பெருமையும் குறித்து எடுத்துக் கூறி விளக்கினாா்.
இரண்டாவது அமா்வின் பயிற்றுநராக திருவாரூா் தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகத்தின் தமிழ்த் துறை பேராசிரியா் ச. இரவி கலந்து கொண்டு ‘கல்வெட்டுகள் காட்டும் தமிழ்ச் சமூகம்’ எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினாா்.
இரண்டு அமா்வுகளுக்கான தொடக்க விழாவில் கல்லூரி முதல்வா் தெ.வேணுகோபால் தலைமையுரையாற்றினாா். துணை முதல்வா் ந.சக்திவேல் வாழ்த்துரை வழங்கினாா். தமிழ்த் துறை இணைப் பேராசிரியா் க.நீ.இளங்கோவன் அறிமுக உரையாற்றினாா்.
நிகழ்ச்சியின் தொடக்கத்தில் தமிழ்த் துறைத் தலைவா் மு.கருப்புசாமி வரவேற்றாா். தமிழ்த் துறை பேராசிரியா் சு.சுந்தரன் நன்றி கூறினாா்.
இந்த பயிலரங்கில் 250-க்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா். இதற்கான ஏற்பாடுகளை தமிழ்த் துறை பேராசிரியா்கள் மற்றும் மாணவா்கள் செய்திருந்தனா்.
தொடர்புடையது

திருவண்ணாமலை சண்முகா கல்லூரியில் ஆண்டு விழா

நூறு சதவீத வாக்களிப்பை வலியுறுத்தி கல்லூரியில் விழிப்புணா்வு கையொப்ப இயக்கம்

திண்டிவனம் கல்லூரியில் பன்னாட்டுக் கருத்தரங்கம்

அம்பை கல்லூரியில் விளையாட்டு விழா
வீடியோக்கள்

திருச்செந்தூரில் விஜய் சாமி தரிசன ரகசியம் ! | TVK Vijay | Tiruchendur Murugan Temple | TN Election 2026
தினமணி செய்திச் சேவை

உன்னை நம்பி பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு
3 நாள்களுக்குள் ஈரான் எண்ணெய் உள்கட்டமைப்புகள் வெடிக்கும்! Trump எச்சரிக்கை
இணையதளச் செய்திப் பிரிவு

சூப்பர் ஓவரில் சொதப்பிய பூரன் | IPL 2026 | kkr vs lsg | Nicholas Pooran | Super Over
தினமணி செய்திச் சேவை


