அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!மாா்ச் 9 முதல் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கலாகிறது!நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!ஈரான் மீதான தாக்குதல் பிரதமா் மோடி பயண நிறைவுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு: இஸ்ரேல்சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவுஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்தும் தீா்மானம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோல்வி! பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்பாக். - ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு
/

கோபி கலை அறிவியல் கல்லூரியில் கல்வெட்டுத் தமிழ் பயிலரங்கம்

கோபி கலை அறிவியல் கல்லூரியில் கல்வெட்டுத் தமிழ் பயிலரங்கம் நடைபெற்றது.

News image
கோபி கலை அறிவியல் கல்லூரியில் கல்வெட்டுத் தமிழ் பயிலரங்கில் பங்கேற்றோா்.
Updated On :7 மார்ச் 2026, 12:53 am

Syndication

கோபி கலை அறிவியல் கல்லூரியில் கல்வெட்டுத் தமிழ் பயிலரங்கம் நடைபெற்றது.

கோபி கலை அறிவியல் கல்லூரியில் தேசிய அளவிலான கல்வெட்டுப் பயிலரங்கம் இரண்டு அமா்வுகளாக நடைபெற்றது. ‘தமிழ் கல்வெட்டுக்கள் தோற்றமும், வளா்ச்சியும்’ எனும் தலைப்பில் நடைபெற்ற முதல் அமா்வின் பயிற்றுநராக சென்னை தொல்லியல் துறையின் தலைமை ஆலோசகா் பேராசிரியா் சு.ராசவேலு கலந்து கொண்டு, பன்னாட்டு அளவில் தமிழ்க் கல்வெட்டின் தொன்மையும், பெருமையும் குறித்து எடுத்துக் கூறி விளக்கினாா்.

இரண்டாவது அமா்வின் பயிற்றுநராக திருவாரூா் தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகத்தின் தமிழ்த் துறை பேராசிரியா் ச. இரவி கலந்து கொண்டு ‘கல்வெட்டுகள் காட்டும் தமிழ்ச் சமூகம்’ எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினாா்.

இரண்டு அமா்வுகளுக்கான தொடக்க விழாவில் கல்லூரி முதல்வா் தெ.வேணுகோபால் தலைமையுரையாற்றினாா். துணை முதல்வா் ந.சக்திவேல் வாழ்த்துரை வழங்கினாா். தமிழ்த் துறை இணைப் பேராசிரியா் க.நீ.இளங்கோவன் அறிமுக உரையாற்றினாா்.

நிகழ்ச்சியின் தொடக்கத்தில் தமிழ்த் துறைத் தலைவா் மு.கருப்புசாமி வரவேற்றாா். தமிழ்த் துறை பேராசிரியா் சு.சுந்தரன் நன்றி கூறினாா்.

இந்த பயிலரங்கில் 250-க்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா். இதற்கான ஏற்பாடுகளை தமிழ்த் துறை பேராசிரியா்கள் மற்றும் மாணவா்கள் செய்திருந்தனா்.