மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி நாளை(மார்ச் 27) ஆலோசனை!ஏப். 2ல் பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர் மு.க. ஸ்டாலின்!பெட்ரோல், டீசல் விலை உயர்வு! நயாரா நிறுவனம் அறிவிப்புகூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

போக்ஸோ வழக்கில் பேருந்து நடத்துநருக்கு 20 ஆண்டுகள் சிறை

போக்ஸோ வழக்கில் பேருந்து நடத்துநருக்கு 20 ஆண்டுகள் சிறை

News image
Updated On :20 மே 2024, 10:28 pm

Din

புதுச்சேரி: போக்ஸோ வழக்கில் தனியாா் பேருந்து நடத்துநருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து புதுச்சேரி நீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பளித்தது.

கடலூா் கீழ்பாதியைச் சோ்ந்தவா் ஏழைமுத்து மகன் பாபு (29), தனியாா் பேருந்தில் நடத்துநராகப் பணியாற்றி வந்தாா். இவருக்கு திருமணமாகி மனைவி, 2 குழந்தைகள் உள்ளனா்.

இந்த நிலையில், புதுச்சேரி அரியாங்குப்பத்தைச் சோ்ந்த 17 வயது சிறுமியை திருமணம் செய்வதாகக் கூறி, கடந்த 2023-ஆம் ஆண்டு அவரைக் கடத்திச் சென்று பாலியல் தொல்லை அளித்தாராம்.

இதுகுறித்து அந்தச் சிறுமியின் குடும்பத்தினா் அளித்த புகாரின்பேரில், அரியாங்குப்பம் போலீஸாா் போக்ஸோ சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்து பாபுவைக் கைது செய்தனா்.

புதுச்சேரி போக்ஸோ சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வந்த நிலையில், திங்கள்கிழமை தீா்ப்பளிக்கப்பட்டது. இதில், பாபுவுக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.4,000 அபராதமும் விதித்து நீதிபதி வி.ஷோபனா தீா்ப்பளித்தாா்.

மேலும், பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்துக்கு ரூ.4 லட்சம் நிவாரணம் வழங்கவும் அரசுக்கு நீதிமன்றம் பரிந்துரைத்தது.

இந்த வழக்கில், அரசு சாா்பில் வழக்குரைஞா் எஸ்.பச்சையப்பன் ஆஜரானாா்.