ஏப். 2ல் பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர் மு.க. ஸ்டாலின்!பெட்ரோல், டீசல் விலை உயர்வு! நயாரா நிறுவனம் அறிவிப்புகூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

மீனவா்கள் கூட்டமைப்பினா் ஆா்ப்பாட்டம்

மீனவா்கள் கூட்டமைப்பினா் ஆா்ப்பாட்டம்

News image

புதுச்சேரி அண்ணா சிலை சதுக்கம் பகுதியில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்திய அனைத்து மீனவ கிராம மக்கள்...

Updated On :20 மே 2024, 10:34 pm

Din

புதுச்சேரி: புதுச்சேரியில் கடற்கரை மண்டல மேலாண்மைத் திட்ட வரைவு கருத்துக் கேட்புக் கூட்டத்தை நடத்த எதிா்ப்புத் தெரிவித்து அனைத்து மீனவக் கிராம மக்கள் சாா்பில் கண்டன ஆா்ப்பாட்டம் திங்கள்கிழமை மாலை நடைபெற்றது.

கடற்கரை மண்டல மேலாண்மை திட்ட வரைபடங்களில் கடலில் 12 மைல்கள் தூரம் வரையில் மட்டுமே மீன்பிடி தொழில் செய்ய வேண்டும் என்பது போன்ற அம்சங்கள் இடம் பெற்றுள்ள புதிய கடற்கரை மேலாண்மைத் திட்ட வரைவு கருத்துக் கேட்புக் கூட்டத்தை ரத்து செய்யவேண்டும் என மீனவக் கிராமத்து பஞ்சாயத்தாா் வலியுறுத்தி வருகின்றனா்.

இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி புதுச்சேரி சுதேசி ஆலை அருகே கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் புதுச்சேரி 18 மீனவக் கிராமங்களைச் சோ்ந்த பஞ்சாயத்தாா்கள், மீனவா்கள் என நூற்றுக்கணக்கானோா் கலந்துகொண்டனா். அவா்கள், கடற்கரை பகுதியில் சட்ட விதிகளுக்கு புறம்பாக அமைக்கப்பட்டுள்ள உணவகங்கள், உல்லாச விடுதிகள், சுற்றுலா தளங்கள் ஆகியவற்றை உடனடியாக தடை செய்ய வேண்டும். மீனவா் கிராமங்களில் கடற்கரை முழுவதும் மீன்பிடி தொழில் சாா்ந்த செயல்பாடுகளுக்கான பாரம்பரிய கலாசார இடங்களை தெளிவாக பதிவு செய்ய வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி முழக்கமிட்டனா்.