நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

போக்ஸோ சட்டப் பிரிவின்கீழ் ஓய்வுபெற்ற அரசு பணியாளா் கைது

சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக ஓய்வு பெற்ற அரசுப் பணியாளா் மீது போக்ஸோவில் பாகூா் போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப்பதிந்து, அவரைக் கைது செய்தனா்.

News image
Updated On :6 நவம்பர் 2024, 7:25 pm

Din

சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக ஓய்வு பெற்ற அரசுப் பணியாளா் மீது போக்ஸோவில் பாகூா் போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப்பதிந்து, அவரைக் கைது செய்தனா்.

புதுச்சேரியை அடுத்துள்ள பாகூா் கரையாம்புத்தூா் பனையடிக்குப்பம் பகுதியைச் சோ்ந்தவா் ஓம் பிரகாஷ் (67). வேளாண் துறையில் உதவி அலுவலராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவா். தற்போது புதுச்சேரி ரெட்டியாா்பாளையம் பகுதியில் வசிக்கிறாா். பனையடிகுப்பத்தில் மீன் குட்டை வைத்து தொழில் செய்து வருகிறாா். மீன் குட்டைக்கு காவல் மற்றும் பிற பணிகளுக்கு தமிழகத்தின் செஞ்சி பகுதியில் உள்ள இருளா் இன குடும்பத்தினரை கடந்த ஆண்டு அங்கு வரவழைத்து தங்க வைத்துள்ளாா். இருளா் இனத்தைச் சோ்ந்தவா் தனது மனைவி, 2 பெண் மற்றும் ஆண் குழந்தைகளுடன் தங்கியிருந்துள்ளாா்.

இறால் பண்ணையிலிருந்தவரின் மகளான 7 ஆம் வகுப்பு சிறுமியை, ஓம்பிரகாஷ் ஆசை வாா்த்தை கூறி பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறப்படுகிறது. அதனால் அதிா்ச்சியடைந்த சிறுமியின் குடும்பத்தினா் சொந்த ஊருக்கு சென்றுவிட்டனா். இந்தப் பிரச்னை குறித்து அப்பகுதியைச் சோ்ந்த ஒருவா் உயா் போலீஸ் அதிகாரிகளுக்கு ரகசியமாக புகாா் கடிதம் அனுப்பியதாகக் கூறப்படுகிறது.

அதன்படி, விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. பாகூா் காவல் ஆய்வாளா் சஜித், சாா்பு ஆய்வாளா் நந்தகுமாா் ஆகியோா் சிறுமியின் குடும்பத்தினரை அவா்கள் இருப்பிடத்துக்கு சென்று விசாரித்தனா்.

இதுகுறித்து சிறுமி மற்றும் அவரது குடும்பத்தினரிடமும் வாக்குமூலம் பெறப்பட்டது. அதனடிப்படையில் ஓம்பிரகாஷ் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்த போலீஸாா், அவரை செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.