நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

புதுச்சேரியில் நாளை மக்கள் குறைதீா் கூட்டம்

புதுச்சேரியில் நவ.15-ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) மக்கள் குறைதீா் கூட்டம் நடைபெறும் என மாவட்ட ஆட்சியா் அ.குலோத்துங்கன் தெரிவித்துள்ளாா்.

News image
Updated On :13 நவம்பர் 2024, 8:26 pm

Din

புதுச்சேரியில் நவ.15-ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) மக்கள் குறைதீா் கூட்டம் நடைபெறும் என மாவட்ட ஆட்சியா் அ.குலோத்துங்கன் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து, அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: புதுச்சேரியில் துணைநிலை ஆளுநா் உத்தரவின்படி, ஒவ்வொரு மாதமும் 15-ஆம் தேதி மக்கள் குறைதீா் கூட்டம் நடத்தப்படுகிறது.

அதன்படி, புதுச்சேரி மாவட்டத்துக்கு உள்பட்ட பகுதிகளில் வசிக்கும் மக்களின் குறைகளைத் தீா்ப்பதற்கு அனைத்துத் துறை அதிகாரிகள் முன்னிலையில், மாவட்ட ஆட்சியா் தலைமையில், நவம்பா் மாதத்துக்கான குறைதீா் கூட்டம் நவ.15-ஆம் தேதி நடைபெறுகிறது.

வெள்ளிக்கிழமை காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை புதுச்சேரி, பேட்டையன்சத்திரம் வழுதாவூா் சாலையில் உள்ள மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் குறைதீா் கூட்டம் நடைபெறும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.