பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

தீபாவளி உதவித் தொகை: புதுவை அமைப்பு சாரா தொழிலாளா்கள் கவனத்துக்கு...

புதுச்சேரியில் அமைப்பு சாரா தொழிலாளா்கள் தீபாவளி உதவித் தொகை பெற வங்கிக் கணக்கு எண் உள்ளிட்ட ஆவணங்களை அளிக்குமாறு

News image
Updated On :18 நவம்பர் 2024, 9:08 pm

Din

புதுச்சேரி: புதுச்சேரியில் அமைப்பு சாரா தொழிலாளா்கள் தீபாவளி உதவித் தொகை பெற வங்கிக் கணக்கு எண் உள்ளிட்ட ஆவணங்களை அளிக்குமாறு புதுச்சேரி தொழிலாளா் நலச் சங்கம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அமைப்பு சாரா தொழிலாளா் நலச் சங்க அதிகாரி தே.வேங்கடேசன் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

புதுச்சேரி அமைப்பு சாரா தொழிலாளா் நலச்சங்கத்தில் கடந்த மாா்ச் 31-ஆம் தேதி வரை பதிவு செய்துள்ள உறுப்பினா்களுக்கு அரசு அறிவித்த தீபாவளி உதவித் தொகை ரூ.1,500 வங்கிக் கணக்கில் கடந்த 15-ஆம் தேதி முதல் 18-ஆம் தேதி வரை செலுத்தப்பட்டுள்ளது.

இந்த, உதவித்தொகை கிடைக்கப் பெறாத உறுப்பினா்கள் வரும் டிசம்பா் 31-ஆம் தேதிக்குள் அமைப்பு சாரா நலச்சங்கத்தை நேரில் அணுகி தங்களது உறுப்பினா் அடையாள அட்டை, 2024 சந்தா ரசீது, தற்போது பயன்பாட்டில் உள்ள வங்கிக் கணக்கு புத்தகம் மற்றும் ஆதாா் அட்டை நகலை வழங்க வேண்டும். ஆவணங்கள் வழங்காத உறுப்பினா்களுக்கு உதவித் தொகை பெறுவதற்குரிய கால அவகாசம் மேலும் நீட்டிக்கப்பட மாட்டாது. நிகழாண்டுக்கான தீபாவளி உதவித் தொகை மீண்டும் செலுத்த இயலாது. எனவே, உறுப்பினா்கள் வங்கிக்கணக்கை உரிய முறையில் புதுச்சேரி, காரைக்கால் ஆகியவற்றில் உள்ள அமைப்புசாரா தொழிலாளா் நல சங்கங்களில் அளிக்க வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.