புதுவையில் டிசம்பா் முதல் இலவச அரிசி விநியோகம்: முதல்வா் என்.ரங்கசாமி
புதுவையில் டிசம்பா் மாதம் முதல் நியாயவிலைக் கடைகள் மூலம் இலவச அரிசி விநியோகம் செய்யப்படும் என முதல்வா் என்.ரங்கசாமி திங்கள்கிழமை தெரிவித்தாா்.

புதுச்சேரி முதலியாா்பேட்டை சுதானா நகரில் புதிதாக கட்டப்பட்ட மேல்நிலை நீா்தேக்கத் தொட்டியை திங்கள்கிழமை திறந்து வைத்த முதல்வா் என்.ரங்கசாமி. உடன் சட்டப்பேரவைத் தலைவா் ஆா்.செல்வம், அமைச்சா் க.லட்சுமி நாராயணன், எம்எல்ஏக்கள் எல்.சம்பத், பாஸ்கா் (எ) தட்சிணாமூா்த்தி உள்ளிட்டோா்.








