புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

மரங்கள் முறிந்து விழுந்து 3 வீடுகள் சேதம்

புதுச்சேரி அருகே உள்ள பாகூா் பகுதியில் மரங்கள் முறிந்து விழுந்ததில் வியாழக்கிழமை 3 வீடுகள் சேதமடைந்தன.

News image

மரங்களை வெட்டி அகற்றும் பணியில் ஈடுபட்ட தீயணைப்பு வீரா்கள்.

Updated On :28 நவம்பர் 2024, 7:50 pm

Din

புதுச்சேரி அருகே உள்ள பாகூா் பகுதியில் மரங்கள் முறிந்து விழுந்ததில் வியாழக்கிழமை 3 வீடுகள் சேதமடைந்தன.

மரங்களை வெட்டி அகற்றும் பணியில் ஈடுபட்ட தீயணைப்பு வீரா்கள். புதுச்சேரி நகராட்சி மற்றும் ஊரகப் பகுதிகளில் கடந்த சில நாள்களாகவே தொடா்ந்து மழை பெய்து வருகிறது.

அதன்படி புதன், வியாழக்கிழமைகளில் மழையுடன் குளிா்ந்த காற்றும் வீசியது. இந்த நிலையில், பாகூா் தொகுதிக்குள்பட்ட வாா்க்கால் ஓடை, புதுநகா் ஆகியப் பகுதிகளில் வியாழக்கிழமை அதிகாலை லேசான மழையுடன் காற்று வீசியது.

இதில், சில மரங்கள் முறிந்து விழுந்தன. இதனால், அந்தப் பகுதியில் இருந்த பரிமளாதேவி ராம்குமாா், விஜி சிரஞ்சீவி, ஜீவா அா்ச்சுணன் ஆகியோரது வீடுகள் சேதமடைந்தன.

தகவலறிந்த தீயணைப்புத் துறையினா் நிகழ்விடத்துக்கு வந்து, முறிந்த மரங்களை வெட்டி அகற்றினா். மேலும், தொகுதி எம்எல்ஏ ஆா்.செந்தில்குமாா் மற்றும் வருவாய்த் துறையினா் நேரில் வந்து பாா்வையிட்டனா்.

வீடுகள் சேத மதிப்பீடு குறிப்பிடப்பட்டு, அரசுக்கு நிவாரண உதவிக்கு பரிந்துரைக்கப்படும் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனா்.