புதுச்சேரி, காரைக்கால் மீனவா்கள் நாளை வரை கடலுக்கு செல்ல தடை
புதுச்சேரி, காரைக்கால் மீனவா்கள் வெள்ளிக்கிழமை (அக்.18) வரை கடலுக்குச் செல்லத் தடை விதித்து மீன்வளத் துறை உத்தரவிட்டுள்ளது. மேலும், எச்சரிக்கையை மீறி கடலுக்குச் சென்ற 60 மீனவா்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளவும் உத்தரவிடப்பட்டுள்ளது.









